’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 8’-ல் புது அம்சமாக ரத்தத்தின் சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் சென்சார் பொருத்தப்படலாம் என டிஜிடைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச்களின் தயாரிப்பில் தனக்கென தனி அடையாளத்துடன் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய அடுத்த தயாரிப்பான ‘வாட்ச் 8'-ல் சில புது அம்சங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இதையும் படிக்க | ’ரியல்மீ கியூ3 ஐ’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
அதில் ஒன்றாக கடிகாரத்தைக் கட்டியிருப்பவரின் ரத்தத்தின் சர்க்கரை மற்றும் குளுக்கோசின் அளவைக் கண்டறியும் சென்சார் பொருத்தப்படலாம் என டிஜிடைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக ஆப்பிள் வாட்ச் 6-ல் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு , ஈசிஜி , இதயத்துடிப்பின் அதிகரிப்பு , குறைவு ஆகியவற்றைக் கண்டறியும் சென்சார்களை முதன்முதலில் அறிமுகப்படுத்தி இருந்தது. தற்போது வாட்ச் 8 சீரியஸ் மேலும் சில சிறப்பம்சங்களுடன் தயாராக இருக்கிறது.
சமீபத்தில் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் 7 சீரியஸ் வெளியானது.அதில் 41 எம்எம் வகை ரூ41,900-க்கும் 44 எம்எம் வகை ரூ.44,900 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இரண்டிற்கும் 10 சதவீத கேஷ்பேக் வசதி இருக்கிறது.
’ஆப்பிள் வாட்ச் சீரியஸ் 7‘ சிறப்பம்சங்கள் :
* துல்லியமானத் திரை
* ரத்த ஆக்ஸிஜன் சென்சார் , ஈசிஜி , இதயத் துடிப்பின் ஏற்ற, இறக்கங்களை அறியும் சென்சார்
* தூக்கத்திலும் உடல் நிலையை அறியும் சென்சார் , தாய்ச்சி மற்றும் பிலாட்ஸ் போன்ற உடற்பயிற்சி செய்முறைகளை தெரிவிக்கும் செயலி
*வாட்டர் புரூப் ஐபி 6எக்ஸ்