திருப்பூர்: திருப்பூர் அருகே சடையபாளையம் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிடுகின்றனர்.
குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையபாளையம் கிராம ஊராட்சியில் தலைவர் பதவிக்கு அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில் உள்ள சடையபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட 10 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் கடந்த முறை ஊராட்சி தலைவராக இருந்த செம்பேகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி, அவரின் மனைவி லட்சுமி, மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன், அவரின் மனைவி செல்வராணி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் அடங்குவர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் பெரியசாமியின் மகன் சிலம்பரசன், பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் மனைவி செல்வராணி உள்ளிட்ட4பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்ற நிலையில் தற்போது அண்ணன், தம்பி, அண்ணன் மனைவி உள்ளிட்ட 6 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் லட்சுமியும் ஏற்கனவே ஊராட்சி தலைவராக இருந்துள்ளார்.