விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் சோலைசேரி ஊராட்சி ஆறாவது வார்டு உறுப்பினராக முத்துமாரி என்பவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அங்கு உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து காலை 11:30 மணிக்கு தகவலறிந்த வேட்பாளர் தரப்பினர் வாக்குப்பதிவை தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஒரு மணி நேரம் கால தாமதத்திற்குப் பின், புதிய வாக்குப்பெட்டி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.