புதிய வாக்குப்பெட்டிக்காக தடுத்து நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் சோலைசேரி ஊராட்சி ஆறாவது வார்டு உறுப்பினராக முத்துமாரி என்பவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
புதிய வாக்குப்பெட்டிக்காக தடுத்து நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஒன்றியம் சோலைசேரி ஊராட்சி ஆறாவது வார்டு உறுப்பினராக முத்துமாரி என்பவர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் அங்கு உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்குச்சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து காலை 11:30 மணிக்கு தகவலறிந்த வேட்பாளர் தரப்பினர் வாக்குப்பதிவை தடுத்து நிறுத்தினர். 

இதனால் ஒரு மணி நேரம் கால தாமதத்திற்குப் பின், புதிய வாக்குப்பெட்டி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com