ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.
மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரிசிபாளையம், சீரபாளையம், போடிபாளையம், மலுமிச்சம்பட்டி, பாலத்துறை, நாச்சிபாளையம், பிச்சனூர், உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 74 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலுமிச்சம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்குமண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.