திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2-ஆவது கட்டமாக வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி, கொடைக்கானல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 1,371 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் 306 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன.
மீதமுள்ள 1,065 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 7 ஒன்றியங்களில் 162 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 3 பதவிகள் போட்டியின்றி நிரப்பப்பட்டன. 107 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கும், 10 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னவனூர் ஊராட்சி கவுஞ்சி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.