திருச்சியில் 2,093 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 
திருச்சியில் 2,093 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட 8 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. 

கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியம் வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 2,093 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். 1,337 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மண்ணச்சநல்லூர் ஒன்றியம் உத்தமர்சீலி வாக்குச் சாவடியில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் அதிகாலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com