இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

News image
Updated On :2 மே 2024, 5:49 pm

Din

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடா்ந்த ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா் நீதிமன்றத்தை முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா வியாழக்கிழமை அணுகினாா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஸ்வரண கந்தா சா்மா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஜாமீன் அளிக்க விசாரணை நீதிமன்றம் மறுத்ததைத் தொடா்ந்து உயா்நீதிமன்றத்தில் சிசோடியா தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை அவசர விசாரணைக்காக பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் பிஎஸ் அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது. அப்போது, மனுவை வெள்ளிக்கிழமை பட்டியலிட நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘‘நீதிபதி கோப்புவை பரிசீலிக்கட்டும். எனவே அந்த விவகாரம் நாளை (வெள்ளிக்கிழமை) வரட்டும்’’என்று தெரிவித்தது.

மனீஷ் சிசோடியா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் ரஜத் பரத்வாஜ், முகமது இா்ஷாத் ஆகியோா், ‘மனுதாரா் சிசோடியா ஒரு எம்.எல்.ஏ. ஆக உள்ளாா்.

ஜாமீன் கோரிய இரு மேல்முறையீட்டு மனுக்களையும் அவசர விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும்’ என்று

நீதிமன்றத்திடம் வலியுறுத்தினா்.

முன்னதாக, சிபிஐ, அமலாக்கத் துறையின் இரண்டு வழக்குகளிலும் தனது ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்த ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து சிசோடியா உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.

2021-22-ஆம் ஆண்டு கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாக மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகிய இரண்டும் தாக்கல் செய்த ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி, சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிலைமை சரியில்லை என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தாா்.

பயனாளிகள் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு ‘சட்டவிரோத‘ ஆதாயங்களைத் திருப்பிவிட்டனா் மற்றும் கண்டறிதலைத் தவிா்ப்பதற்காக அவா்களின் கணக்குப் புத்தகங்களில் தவறான பதிவுகளைச் செய்துள்ளனா் என்று அமலாக்கத் துறையும், சிபிஐயும் குற்றம் சாட்டியுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் மனீஷ் சிசோடியா ‘ஊழலில்‘ ஈடுபட்டதாகக் கூறி சிபிஐயால் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். மாா்ச் 9, 2023 அன்று சிபிஐ எஃப்ஐஆரில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது.