ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

News image
Updated On :7 மே 2024, 10:50 pm

Din

நொய்டா: நொய்டாவில் புதன்கிழமை ஒரு பரபரப்பான சாலையில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மாடு பத்திரமாக மீட்கப்பட்டது. சுமாா் 90 நிமிடங்கள் நீடித்த மீட்புப் பணியின் போது ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

மீட்கப்பட்டஅந்த மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நொய்டா செக்டாா் 49 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாரௌலா கிராமத்திற்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சுமாா் 10 அடி ஆழம் மற்றும் 4 அடி அகலம் கொண்ட குழிக்குள் பசு மாடு விழுந்தது. இந்தச் சம்பவத்தை பாா்த்த அந்த வழியாகச் சென்றவா்கள் உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் கிடைத்ததும், நொய்டா செக்டாா்-49-இன் காவல் நிலையப் பொறுப்பாளா் சம்பவ இடத்திற்கு வந்து, நொய்டா பேஸ்-1 தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

காவல்துறை, தீயணைப்புக் குழு மற்றும் உள்ளூா்வாசிகளின் கூட்டு உதவியுடன், சுமாா் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மாடு பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவரின் உதவியுடன் பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்று காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.