தலைநகரில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

புது தில்லி, மே.9: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை (மே 10) அன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, நகரத்தில் வியாழக்கிழணை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்து ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் 40 டிகிரிக்குள் பதிவாகி வந்த வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 டிகிரி செல்சியஸை கடந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில்1 டிகிரி உயா்ந்து 26 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 1 டிகிரி குறைந்து 38.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 59 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 44 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து பெரும்பாலான இடங்களில் ‘மிதமான’ பிரிவில் இருந்தது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன், விவேக் விஹாா், நியூ மோதி பாக், சோனியா விஹாா், மதுரா ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், அசோக் விஹாா், புசா, நோய்டா செக்டாா் 62, வாஜிா்பூா், ஓக்லா பேஸ் 2, புராரி ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌௌக், பட்பா்கஞ்ச், நேரு நகா், ஆனந்த் விஹாா், நொய்டா செக்டாா் 1, ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவுக்குச் சென்றது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 10) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும். இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

09க்ங்ப்ட்ா்ற்

தில்லி பாலிகா பஜாா் அருகே வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள துப்பட்டாவால் முகத்தை முடிக் கொண்டு செல்லும் பெண்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com