

நீலவன் - சா.கந்தசாமி; பக்.176; ரூ.100; சிந்தியன் பதிப்பகம், சென்னை-35; )044 -2434 3806.
நடுத்தர மக்கள் அதிகமாக வாழும் புறநகர்ப் பகுதியான தென்றல் நகரில் நீலவன் என்ற மாய உருவம் வருவதால் ஏற்படும் நிகழ்வுகளை மிகச் சுவையாகச் சொல்லும் நாவல். துப்பறியும் நாவலுக்கேயுரிய பரபரப்பு இருந்தாலும், நடுத்தர வர்க்க மனிதர்களின் மனோபாவம் இந்நாவலில் மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசியல் செல்வாக்குமிக்கவர்கள், வீடுவீடாகப் பால் பாக்கெட் போடுபவர், நடிகை என பலதரப்பட்ட மனிதர்கள் இந்த நாவலில் உயிரோடு வாழ்ந்திருக்கிறார்கள். யார் அந்த நீலவன் என்றறியும் ஆர்வம் நூலைப் படித்து முடித்த பின்பும் இருக்கிறது. நீலவன் நல்லவர்களுக்கு நல்லவனாகவும், கெட்டவர்களுக்கு கெட்டவனாகவும் இருப்பதும், அவனைப் பார்த்து பலர் பயந்தாலும், சிலர் விரும்புவதும் இன்றைய சமூக வாழ்வின் சாரம்சத்தை நமக்குச் சொல்வதாக இருக்கிறது. பல குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தமிழுலகுக்கு அளித்திருக்கும் நூலாசிரியரின் இன்னொரு பங்களிப்பு இந்நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.