அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒரு வாசகம், ஒரு மனிதர், ஒரு சம்பவம்

நூலை முழுமையாக வாசித்த பின்னர், நம்மை வழிநடத்தும் வாசகம் எது?, நாம் பெரிதும் மதிக்கும் நபர் யார்? நமக்கு எப்போதும் நினைவில் இருக்கும் சம்பவம் எது? என்பதை இந்த நூல் சிந்திக்க வைக்கும்.

News image
Updated On :8 டிசம்பர் 2025, 7:59 am

தினமணி செய்திச் சேவை

ஒரு வாசகம், ஒரு மனிதர், ஒரு சம்பவம்-எழுத்தாக்கம் நா.கதிர்வேலன், வெ.நீலகண்டன்; பக்.168; ரூ.220; விகடன் பிரசுரம், சென்னை-600002, ✆ 80560 46940.

ஆனந்த விகடனில் வெளியான ஒரு வாசகம், ஒரு மனிதர், ஒரு சம்பவம் தொடர், நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தங்களை வழிநடத்தும் வாசகம், மறக்க முடியாத நபர்கள் மற்றும் சம்பவங்களை சமூகத்தில் முக்கியஸ்தர்களாக மதிக்கப்படும் 27 பேர் பகிர்ந்துள்ளனர்.

இந்த நூலில் பல வாசகங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் 'கையில்லாமல், காலில்லாமல் உறுப்புகள் கோரப்பட்டு மனிதர்கள் இருக்கிறார்கள். வயிறு இல்லாத மனிதன் இல்லவே இல்லை', 'இறைவா, எங்களுக்கு மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், மாற்றக்கூடியதை மாற்றும் துணிவும், இவற்றைப் பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்' போன்ற வாசகங்கள் எப்போதும் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

புரிந்துகொள்வது வேறு, உணர்ந்துகொள்வது வேறு என்பர். ஒளிப்பதிவாளர் செழியன் குறிப்பிட்ட சம்பவத்தை கற்பனை செய்து நம்மை அதில் பொருத்திப் பார்த்தால், நிச்சயம் அவருக்கு ஏற்பட்ட உணர்வை ஓரளவேனும் உணர முடியும்.

மேஜர் ஜெனரல் அயென் கார்டோஸோ குறித்து வழக்குரைஞர் சுமதி தெரிவித்த சம்பவம் நெஞ்சுரத்தின் உச்சம். கவிஞர் மனுஷ்ய புத்திரன் கூறிய சம்பவமும், நல்லி குப்புசாமி செட்டியாரின் தந்தை குறித்து எழுத்தாளர் அசோகமித்திரன் கூறியதும் நெகிழச் செய்கின்றன.

பேராசிரியை விதுபாலா கூறிய வாசகத்தை குறிப்பிட்டு, மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் குறித்த தகவல், உடல்நலனில் எள்ளளவும் அலட்சியம் இல்லாமல் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

எழுத்தாளர் இமையத்துக்கு பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட்டும், மருத்துவர் எழிலன் நாகநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூறிய அறிவுரை நம் அனைவருக்கும் ஒவ்வொரு வகையில் பொருந்தும். நூலை முழுமையாக வாசித்த பின்னர், நம்மை வழிநடத்தும் வாசகம் எது?, நாம் பெரிதும் மதிக்கும் நபர் யார்? நமக்கு எப்போதும் நினைவில் இருக்கும் சம்பவம் எது? என்பதை இந்த நூல் சிந்திக்க வைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.