அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர்; தாய்லாந்தில் பாரதியார்

படகுப் பயணம், மனம் மகிழும் நீர்விளையாட்டுகள், மிதக்கும் அங்காடி, இரவு நேர கடை வீதி என்று தாய்லாந்தின் சிறப்புகளை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.

News image
Updated On :8 டிசம்பர் 2025, 8:04 am

தினமணி செய்திச் சேவை

ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர் தாய்லாந்தில் பாரதியார்- முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன்; பக்.96; ரூ.100; கங்கை புத்தக நிலையம், சென்னை-600 017; ✆ 044- 2434 2810.

தமிழிசைக் கலைஞர், கர்நாடக இசை வித்வான், திரைப்படப் பின்னணிப் பாடகர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளைக் கொண்ட நூலாசிரியர் சிறந்த எழுத்தாளரும்கூட! இவர் பிரபலங்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் இனிமையான பயண அனுபவங்கள், நினைவுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் திருவள்ளுவர் சிலையை நிறுவிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் மற்றும் அவரது குழுவினருடன் நூலாசிரியர் மேற்கொண்ட பயணத்தின் தொடக்கம்முதல் நிகழ்ச்சி நிரல், சுற்றுப் பயணம், ஊர் திரும்புதல் வரை படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. இதற்கு நூலாசிரியரின் எளிய தமிழ் நடையே காரணம் எனலாம்.

பயணத்தின்போது திருக்குறள் வாசிப்பு, அது தொடர்புடைய பேச்சுகள், பிற நிகழ்ச்சிகள் குறித்த குறிப்புகளை வாசிக்கும்போது, அந்தப் பயணத்தில் நாமும் பங்கேற்றோமோ என்ற எண்ணமே மேலோங்குகிறது.

ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விழாவை சென்னையில் நடத்தும் பாரதியார் சங்கம் மலேசியாவின் கோலாலம்பூரிலும், இலங்கையின் கொழும்பிலும் நடத்திவிட்டு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடத்தியிருக்கிறது. இந்த விழாவுக்குச் சென்ற 50 பேர் குழுவினரின் பயண விவரத்தையும், நிகழ்ச்சியையும் முந்தைய நிகழ்வைப்போலவே நூலாசிரியர் தொகுத்துள்ளார்.

படகுப் பயணம், மனம் மகிழும் நீர்விளையாட்டுகள், மிதக்கும் அங்காடி, இரவு நேர கடை வீதி என்று தாய்லாந்தின் சிறப்புகளை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.