மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சர்வக்ஞர் வெண்பா

தமிழ்-கன்னட மொழி இலக்கியங்களுக்கிடையே பாலம் அமைக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், சர்வக்ஞரின் கருத்துகள் குறித்து இரு மொழிகளிலும் ஒப்பாய்வு செய்வோருக்கு மிகவும் பயனுள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 10:53 am

தினமணி செய்திச் சேவை

சர்வக்ஞர் வெண்பா-ஓர் பன்முகப் பார்வை; பேராசிரியர் க.கோவிந்தராசன்; பக்.312; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.

கர்நாடகத்தில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர்களுள் ஒருவர் சர்வக்ஞர். ஜாதிமத வேறுபாடுகளை தனது பாடல்களால் தகர்த்தெறிந்து, சிறந்த சீர்திருத்தவாதியாகவும், முற்போக்காளராகவும், மூடநம்பிக்கைகளைச் சாடியவராக புரட்சியாளராகவும் விளங்கிய துறவி. 2,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் படைத்துள்ள இவர், 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. 'ஆடு தொடாத இலையில்லை, சர்வக்ஞர் சொல்லாத செய்தியில்லை' என்ற பழமொழி, அவரது கவிவண்ணத்தைச் சொல்லும்!

தமிழில் திருவள்ளுவர் ஈரடிக் குறளை இயற்றியதைப்போல, சர்வக்ஞர் கன்னட மொழியில் மூன்று அடிகளாலான யாப்பு வகையில் படைத்துள்ள பாடல்கள் தனிமனித ஒழுக்கம், பக்தி, சமுதாயத்துக்கான அறிவுரைகளை வழங்குகின்றன. அந்தப் பாடல்களை பேராசிரியர் தா.கிருட்டிணமூர்த்தி தமிழில் "சர்வக்ஞர் வெண்பா'வாக மொழிபெயர்த்துள்ளார். அந்த நூலை ஆய்வுப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், சர்வக்ஞரின் அறிவுப் பார்வை, ஆன்மிகம், இல்லறம், அரசியல், உலகியல் பார்வைகள் குறித்து ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்கிறது.

திருக்குறளுடன் மட்டுமன்றி திருவாசகம், தேவாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நீதிநூல்களில் உள்ள பாடல்களுடனும், ஒளவையார், வள்ளலார், பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டியும் சர்வக்ஞரின் சிந்தனைகளை ஒப்பிட்டு எடுத்துரைப்பது சிறப்பு சேர்க்கிறது.

தமிழ்-கன்னட மொழி இலக்கியங்களுக்கிடையே பாலம் அமைக்கும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல், சர்வக்ஞரின் கருத்துகள் குறித்து இரு மொழிகளிலும் ஒப்பாய்வு செய்வோருக்கு மிகவும் பயனுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.