தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நித்திலன் வாக்குமூலம்

மிக எளிதாக எல்லோரும் இம்மூன்று நாவல்களிலும் பயணித்துவிட முடியாது. ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம் இருந்தால் மட்டுமே அது தரும் ஆச்சரியங்களை ரசிக்கவும், அனுபவத்தை உள்வாங்கவும் முடியும் என்பதே இந்நாவலின் சிறப்பு.

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 2:08 pm

தினமணி செய்திச் சேவை

நித்திலன் வாக்குமூலம் - கபிலன் வைரமுத்து; பக்.202; ரூ.300; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், கே.கே.நகர் மேற்கு, சென்னை - 600 078, ✆ 99404 46650.

கபிலன் வைரமுத்துவின் ஆகோள் என்ற அறிவியல் புதினத் தொடரில் ஆகோள், மாக்கியவெல்லி காப்பியம் வரிசையில் மூன்றாம் பாகமாகவும் நிறைவாகவும் நித்திலன் வாக்குமூலம் வெளிவந்துள்ளது. நித்திலனின் மரணம் குறித்து புலன் விசாரணையாக இந்நூல் வளர்வதோடு மட்டுமல்லாது, அதிகார மர்மங்களுக்கு அருகே சிறு வெளிச்சத்தைப் பாய்ச்ச முனைந்திருக்கிறது.

அறிவியலைப் மையப்படுத்திய நவீன யுகம் அடுத்து என்னென்ன அதிசயம் அல்லது அழிவுகளை ஏற்படுத்தப் போகிறதோ என்று அவ்வப்போது சாமானியனின் மனதில் எழும் எண்ணங்களை அப்படியே காட்சிகளாக கண்முன் நிகழ்த்திக் காட்டுகிறது இந்நாவல்.

இந்நாவலைப் படித்து முடிக்கையில் ஏற்கெனவே வெளியான இரண்டு பாகங்களை வாசித்த அனுபவமும், கால ரயிலேறி முக்காலத்திலும் பயணித்த அனுபவமும் ஏற்படுகிறது.

அதுபோலவே அரசியல், வரலாறு, அறிவியல் மட்டுமல்லாது இதுவரை பயன்பாட்டில் இல்லாத நவீன தொழில்நுட்பத்தோடும் உரையாடும் அனுபவமும் ஏற்படுகிறது.

கடந்த கால வரலாறு, நிகழ்கால அரசியல், எதிர்காலத் தேவை ஆகியவற்றை மக்களின் சார்பில் பேசுவதால் இது ஏனைய சமகால சரித்திர நாவல்களில் இருந்து வேறுபட்டு தனிச்சிறப்பு மிக்க படைப்பாக மிளிர்கிறது.

மிக எளிதாக எல்லோரும் இம்மூன்று நாவல்களிலும் பயணித்துவிட முடியாது. ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம் இருந்தால் மட்டுமே அது தரும் ஆச்சரியங்களை ரசிக்கவும், அனுபவத்தை உள்வாங்கவும் முடியும் என்பதே இந்நாவலின் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.