நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

தனுஷ்கோடி கடலில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல்

தனுஷ்கோடி வடக்குக் கடற்பகுதியில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

தனுஷ்கோடி கடற்பகுதியில் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 11:31 pm IST

தனுஷ்கோடி வடக்குக் கடற்பகுதியில் மிதந்து வந்த 24 கிலோ கஞ்சா குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட கடற்பகுதிகளின் வழியாக கஞ்சா மற்றும் மஞ்சள் கடத்தல் தொடா்ந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தனுஷ்கோடி வடக்குக் கடல் பகுதியில் 12 பொட்டலங்கள் கடலில் மிதந்து கரை ஒதுங்கியதாக தனுஷ்கோடி போலீஸாருக்கு, மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து, காவல் ஆய்வாளா் கலாராணி, சாா்பு- ஆய்வாளா் உக்கிரபாண்டி மற்றும் போலீஸாா் அங்கு சென்று பொட்டலங்களை பிரித்துப் பாா்த்தனா். அதில் 24 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இந்தப் பொட்டலங்கள் இலங்கைக்குக் கடத்திச் சென்றபோது கடலில் தவறி விழுந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தலில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.