ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை ராமநாடார்பட்டியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மே.29 ல் நடைபெறுகிறது.
ஐந்தாங்கட்டளை ராமநாடார்பட்டியில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மே.27 ல் தொடங்குகிறது.தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகளும்,ஹோமம்,சிறப்பு தீபஆராதனை ஆகியன நடைபெறுகிறது.மே.29 ல் மகா கும்பாபிசேகம் நடைபெறுகிறது.
மே.27 திங்கள்கிழமை காலை கணபதிஹோமம்,சுதர்சனஹோமம், நவக்கிரகஹோமம் உள்ளிட்டவைகளும்,மாலை 5 மணிக்கு மகாலட்சுமிபூஜை, யாகசாலைப்ரவேசம்,பூர்ணாஹீதி,தேவாரஇன்னிசை உள்ளிட்டவைகளும் நடைபெறுகிறது.
மே.28 செவ்வாய்க்கிழமை காலை தோரணைபூஜை,இரண்டாம்கால யாகபூஜை,தீப ஆராதனை,மந்திரபுஸ்பம் உள்ளிட்டவைகளும்,அன்று மாலை மூன்றாம் கால யாகவேள்விகள்,வேதபாராயணம்,பூர்ணாஹீதி ஆகியனவும் நடைபெறுகிறது.
மே.29 புதன்கிழமை காலையில் கோபூஜை,சூர்யநமஸ்காரம்,தோரணைபூஜை, மந்திரபுஷ்பம்,சந்தானம் புர்ணாகுதி,தீபஆராதனை,யாத்ராதானம் ஆகியன நடைபெறுகிறது.
பகல் 11 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் எழுந்து அருளி விமானம் மற்றும் மூலாயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிசேகம் நடைபெறுகிறது.
அன்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.