நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஆகையால் எந்தத் தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.
• விக்னங்கள், இடையூறுகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம்.
• வீட்டில் செல்வம் சேர ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீநாராயணரை வணங்கலாம்.
• அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவபெருமானுக்கு உகந்த சிவஸ்துதியை துதிக்கலாம்.
• கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கலாம்.
• திருமணத் தடை நீங்க ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மனை வழிபடலாம்.
• மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரியை வழிபடலாம்.
• புத்திர பாக்கியம் பெற சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை ஆராதிக்கலாம்.
• புதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜலட்சுமியை வணங்கலாம்.
• தொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம்.
• வீடும், நிலம் பெற ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவானை வணங்கலாம்.
• பில்லி, சூனியம், செய்வினை அகல ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம்.
• நோய் தீர ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.
• ஆயுள், ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபடலாம்.
• மனவலிமை, உடல் வலிமை பெற ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடலாம்.
• விவசாயம் தழைக்க ஸ்ரீ தான்யலட்சுமியை வணங்கலாம்.
• உணவுக் கஷ்டம் நீங்க ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம்.
• பகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.