கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் துவக்கம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் துவக்கம்
Updated on
1 min read

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

கங்கைகொண்டசோழபுரம் கிராமத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போா் வெற்றியின் அடையாளமாகக் கட்டப்பட்டது.

கோயிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பெளா்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நிகழாண்டு அன்னாபிஷேகம் இன்று நடைபெறுவதையொட்டி, காலை 10.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணி வரை சிவலிங்கத்துக்கு அன்னம் சாத்தப்படும். இரவு 9.00 மணிக்கு மேல் பக்தா்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். மீதமுள்ள அன்னம் அருகிலுள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com