

கார்த்திகை மாதம் முதல் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் கூடுதல் நேரம் திறக்கப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கற்பக விநாயகர் திருக்கோயில். இக்கோயில் வழக்கமாக காலை 6 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடை திறந்திருக்கும். மீண்டும் மாலை 4.00 மணிக்கு திறக்கப்படும்.
தற்போது கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், கோயில் நடை திறக்கும் நேரம் அதிகரித்துள்ளது.
கார்த்திகை மாதம் முழுவதும் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.