Enable Javscript for better performance
weekly prediction (November 01-07) | வார பலன்கள் (நவம்பர் 01 - 07)- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இந்த வாரம் யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

    By   |   Published On : 01st November 2019 11:10 AM  |   Last Updated : 01st November 2019 12:19 PM  |  அ+அ அ-  |  

    prediction

     

    12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (நவம்பர் 01 - நவம்பர் 07) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

    மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

    தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். மூத்த உடன்பிறந்தோர் வகையில் சிறிது குழப்பங்கள் ஏற்படும். ஆனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளாலும் நன்மை அடைவீர்கள். உடல்நிலையில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளவும். 

    உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் இதுநாள் வரை இருந்து வந்த சுமை விலகும். மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் உழைப்புக்கேற்ற பலன்களை அனுபவிப்பார்கள். கால்நடை வைத்திருப்போர் நல்ல லாபத்தைக் காண்பார்கள். 

    அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளிலும் நேர்த்தியாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். பணவரவும் சிறப்பாக இருக்கும்.

    பெண்மணிகள் கணவரின் ஆதரவு, பெற்றோரின் அரவணைப்பைப் பெறுவார்கள். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

    பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தன்று அருகம்புல் மாலையும் அர்ச்சனையும் செய்வது நலம் தரும். 

    அனுகூலமான தினங்கள்: 1, 2. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}

    ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

    எந்த செயலிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சகோதரிகளுடன் சுமுகமாக நடந்து கொள்ளவும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சுமுகமான நிலைமை உருவாகும். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இதனால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். 

    அரசியல்வாதிகள் அனைவராலும் புகழப்படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாக முடிப்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

    பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். 

    பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்கி வரவும்.

    அனுகூலமான தினங்கள்: 3, 4. 

    சந்திராஷ்டமம்:  1, 2.

    {pagination-pagination}
    மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

    குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பணவரவு சீராக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கணவன் மனைவி இடையே சிறு சிறு மனக்கசப்புகள் தோன்றும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலைகளில் குறை காணக் காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

    அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் வராது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிநடை போடுவீர்கள். 

    பெண்மணிகள் குழந்தைகளால் பெருமை அடைவார்கள். கணவரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் அதிக ஈடுபாடு செலுத்துவார்கள். வெளிஅரங்க விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி அடைவர்.

    பரிகாரம்: அம்பாளை வணங்கி அருளைக் கூட்டிக் கொள்ளவும். 

    அனுகூலமான தினங்கள்:  1, 6. 

    சந்திராஷ்டமம்:  3, 4, 5.

    {pagination-pagination}
    கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

    உங்கள் எண்ணங்களில் தெளிவு பிறக்கும். செயல்களில் தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமாக இருக்கும். தந்தை வழி உறவில் சிறு சலசலப்பு உண்டாகி மறையும். செலவு செய்யும்போது சிக்கனத்தைக் கடைபிடிக்கவும்.

    உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்கவும். சிலர் மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து அன்புடன் பழகவும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவார்கள். விவசாயிகளுக்கு செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

    அரசியல்வாதிகள் மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். கடன்களை வாங்கி தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புக் குறைவே. 

    சக கலைஞர்களின் உதவி கிடைக்காது. பெண்மணிகள் ஆடை அணிமணிகளை வாங்கும் ஆசையை குறைத்துக் கொள்ளவும். கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

    பரிகாரம்: அஷ்டதசபுஜ துர்க்கையை விளக்கேற்றி வணங்கி வரவும். 

    அனுகூலமான தினங்கள்:  2, 4. 

    சந்திராஷ்டமம்:  6, 7. 

    {pagination-pagination}
    சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

    குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்கவும். வருமானத்தை மீறி அதிக செலவுகள் செய்ய நேரிடும். சிக்கனத்துடன் இருக்கவும். எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் தைரியம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். 
    வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகமாக இருந்தாலும் லாபம் குறையும். வருமானத்தைப் பெருக்க ஊடுபயிர் உற்பத்தி செய்யவும்.

    அரசியல்வாதிகளின் வாக்குக்கு நல்ல வரவேற்பு இருக்கும். கட்சி மேலிடத்திடம் கவனத்துடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு முயற்சிக்கு ஏற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

    பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவார்கள். கணவரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்தவும். 

    பரிகாரம்: சனியன்று சனீஸ்வரபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். 

    அனுகூலமான தினங்கள்: 5, 6.

    சந்திராஷ்டமம்:  இல்லை.

    {pagination-pagination}
    கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

    மதிப்பு மரியாதை அதிகரிக்கும். செயல்களில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். விரக்திகளும் விரயங்களும் நீங்கி வருவாய் பெருகும். உடல்நிலையில் மிகுந்த அக்கறை எடுக்கவும். அனைவரையும் அனுசரித்து நடக்கவும். 

    உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்தி மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடங்கள் இராது. விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கடன் வாங்குவதையும் தவிர்க்கவும். 


    அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிய குறைபாடுகள் உண்டாகும். கவனமாகச் செயல்படவும். 

    கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பெண்மணிகள் புத்தாடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். கணவரிடம் ஆதரவைப் பெறுவார்கள். மாணவமணிகள் கடினமாக உழைத்து படிக்க வேண்டி வரும். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவு உற்சாகம் அளிக்கும்.

    பரிகாரம்: குலதெய்வத்தை வழிபாடு செய்து பலனைப் பெருக்கவும். 

    அனுகூலமான தினங்கள்:  4, 5. 

    சந்திராஷ்டமம்:  இல்லை.

    {pagination-pagination}

    துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

    தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சோம்பிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாக காணப்படும். வீடு மாற்றம் செய்பவர்களுக்கு இது உகந்த காலம்.

    உத்தியோகஸ்தர்கள் சிறிய முயற்சிகளில் வேலைகளை முடித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். அவசியமான பொருள்களை மட்டும் வியாபாரம் செய்யவும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் கூடுமாகையால் கவனம் தேவை. 

    அரசியல்வாதிகள் மேலிடத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம். எதையும் ஆலோசித்துச் செய்யவும். எதிரிகளின் பலம் அதிகமிருப்பதால் கவனம் தேவை. 

    கலைத்துறையினர் சரிவுகள் நீங்கி முன்னேற்றம் காண்பார்கள். பெண்மணிகள் தன யோகத்தைக் காண்பார்கள். கணவருடன் ஒற்றுமை காணப்படும். மாணவமணிகள் விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும். கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

    பரிகாரம்: "நமசிவாய" மந்திரத்தை 108 முறை எழுதியும், ஜபித்தும் வரவும். 

    அனுகூலமான தினங்கள்:  3, 5. 

    சந்திராஷ்டமம்:  இல்லை.

    {pagination-pagination}

    விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

    உடல் ஆரோக்கியம் பலப்படும். தொழிலில் முன்னேற்றம் தென்படும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நன்மைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீடு மாறும் எண்ணம் வேண்டாம். 

    உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வியாபாரிகள் கடுமையாக உழைப்பார்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உண்டு. விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு பலன் பெறலாம். 

    அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். யாரிடமும் மனம் திறந்து பேசுவதைத் தவிர்க்கவும். திட்டமிட்ட வேலைகளைச் சற்று தள்ளி வைக்கவும். 

    கலைத்துறையினர் நிதானத்துடன் நடந்துகொண்டால் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்தவும். பாடங்களை பலமுறை படிப்பது நல்லது. 

    பரிகாரம்: ஞாயிறன்று ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும். 

    அனுகூலமான தினங்கள்: 4, 6. 

    சந்திராஷ்டமம்: இல்லை.

    {pagination-pagination}
    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

    வேலைகளைச் சுலபமாகச் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். மனக்குறையும் போராட்டங்களும் முடிந்து பிரகாசமான வாய்ப்புகள் வரக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். பொருளாதார நிலையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளை மிகவும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சிலருக்குப் பதவி உயர்வும் கிட்டும். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். 
    வியாபாரிகள் புதிய முயற்சிகளில் இறங்கவும்.வியாபாரத்தில் புதிய யுக்திகளையும் நுணுக்கங்களையும் புகுத்தவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளால் நன்மை உண்டு. 

    அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கூடும். ஆனால் அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் சில குறுக்கீடுகள் ஏற்படும். கலைத்துறையினருக்கு புகழ் அதிகரிக்கும். நல்ல பெயரை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

    பெண்மணிகள் சுற்றத்தாரிடம் பழகும்போது விழிப்புடன் இருக்கவும். மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.  மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையாகப் பயிற்சி செய்தால் முதலிடம் பெறுவீர்கள்.

    பரிகாரம்: ராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

    அனுகூலமான தினங்கள்: 6, 7. 

    சந்திராஷ்டமம்: இல்லை

    {pagination-pagination}

    மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

    நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தென்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளின் பலம் குறையும். வசீகரமான பேச்சின் மூலம் பிறரைக் கவர்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதிய முதலீடுகளிலும் ஈடுபடலாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

    அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்களைப் பாராட்டும். சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிவாகை சூடும். 

    பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். கணவரின் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவர். எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.

    பரிகாரம்:  மகாலட்சுமியை வணங்கவும். சுக்கிரபகவானுக்கு வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சிக்கவும். 

    அனுகூலமான தினங்கள்: 2, 7. 

    சந்திராஷ்டமம்:  இல்லை.

    {pagination-pagination}
    கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

    சவால்களைச் சந்தித்து காரியங்களை முடிப்பீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். எதிரிகள் பலமிழந்து காணப்படுவார்கள். உங்களைச் சாதாரணமாக நினைத்தவர்களும் உங்கள் அறிவுரையை ஏற்பார்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுஅதிகரித்தாலும் அலுத்துக் கொள்ளாமல் செயலாற்றுங்கள். மேலதிகாரிகளின் அறிவுரைப்படி நடக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். இருப்பினும்  புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே எடுக்கவும். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். தானிய பொருள்கள் உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். 

    அரசியல்வாதிகளைத்தேடி புதிய பதவிகள் வந்து சேரும். தொண்டர்களின் அமோக ஆதரவு இருக்கும். கலைத்துறையினர் தலை நிமிர்ந்து நடப்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். 

    மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். விளையாட்டில் ஈடுபடும்போது கவனத்துடன் விளையாடவும்.

    பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளெருக்கு, அருகம்புல் சாற்றி வணங்கவும். 

    அனுகூலமான தினங்கள்:  4, 6. 

    சந்திராஷ்டமம்:  இல்லை.

    {pagination-pagination}
    மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

    குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். நீண்டகால எண்ணங்கள் ஈடேறும். கடினமான உழைப்பிற்குப்பிறகே வெற்றி தேடி வரும். வாகனங்களில் செல்லும்போது கவனத்துடன் இருக்கவும். சட்டத்துறையில் இருப்பவர்களுக்கு இது பயனுள்ள காலமாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் அனுசரணையாக இருக்க மாட்டார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். 

    வியாபாரிகளுக்கு கொள்முதலில் சுமாரான லாபமே கிடைக்கும்.விவசாயிகள் கூடுதல் விளைச்சலைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுபக்காரியங்கள் நடைபெறும்.

    அரசியல்வாதிகள் அனைவரிடமும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். 

    பெண்மணிகள் மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். கல்வியிலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபட்டு வரவும். 

    அனுகூலமான தினங்கள்: 5, 7. 

    சந்திராஷ்டமம்:  இல்லை.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp