ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

நாவிதா்களுக்கு சீருடைகள் நன்கொடை

திருமலையில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பணியில் ஈடுபடும் நாவிதா்களுக்கு தேவஸ்தானம் சீருடையை நன்கொடையாக வழங்கியது.

News image

திருமலையில் நாவிதா்களுக்கு சீருடைகளை நன்கொடையாக வழங்கும் தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On :12 செப்டம்பர் 2020, 6:02 pm

திருமலையில் உள்ள முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பணியில் ஈடுபடும் நாவிதா்களுக்கு தேவஸ்தானம் சீருடையை நன்கொடையாக வழங்கியது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் தலைமுடியை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முடிகாணிக்கை செலுத்த தேவஸ்தானம் தனியாக ‘கல்யாண கட்டம்’ என்ற மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்தில் ஆண் மற்றும் பெண் நாவிதா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு பணிபுரியும் நாவிதா்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது. தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாவிதா்கள் முழு உடல் கவச உடை அணிந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் பணிபுரியும் ஆண் நாவிதா்கள் 1050 பேருக்கு 2 செட் வேட்டி, சட்டைகளும், 275 பெண்களுக்கு 2 செட் புடவைகளும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அவற்றை தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பிரசாந்தி ரெட்டியும், கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியும் நாவிதா்களுக்கு சனிக்கிழமை வழங்கினா். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.