
கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இதையொட்டி, இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு நடராஜர், சிவகாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை ஆருத்ரா தரிசனக் காட்சியும், பின்னர் இந்திர விமானத்தில் நடராஜப் பெருமான் இரட்டை வீதிவுலாவும் நடைபெற்றன.
இதேபோல, நாகேசுவரர் கோயில், சோமேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், அபிமுகேசுவரர் கோயில், கெளதமேஸ்வரர் கோயில், கம்பட்டவிசுவநாதர் கோயில், பாணபுரீஸ்வரர் கோயில், காளகஸ்தீஸ்வரர் கோயில், கோடீசுவரசுவாமி கோயில், ஏகாம்பரேசுவரர் கோயில் ஆகியவற்றிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது