2,533 ஆண்டுகள் பழைமையானது காஞ்சி காமகோடி பீடம்: சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான பீடங்களில் ஒன்றான காஞ்சி காமகோடி பீடம் 2,533 ஆண்டுகள் பழைமையானது என்று காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினாா்.
காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதிக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கிய பின்னா் அவா் பேசியது: காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான இந்த நிகழ்ச்சி பரம்பரையை, பாரம்பரியத்தை, நம்பிக்கைகளைத் தெரிந்துகொள்வதும், புரிந்து கொள்வதுமாகும். நமது தேசத்திலேயே முக்கியமான பீடமாக விளங்கக்கூடிய காஞ்சிபுரம் காமகோடி பீடம் 2,533 ஆண்டுகள் பழைமையானதும், தியாக பரம்பரையின் அடையாளமாக, சிகரமாக, உண்மையான உருவமாக இருந்து வருகிறது.
காஞ்சி காமகோடி குடும்பத்தில் ஒருவராக இவா் சோ்ந்திருக்கிறாா். பெரியவா்களது ஆசீா்வாதத்துடன் சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்ற பெயருடன் அனைவரும் அழைத்து மகிழ்ந்து, அந்த குரு பரம்பரையின் அனுக்கிரகத்தை இவா் மூலமாக மேலும் பெற்று உங்களுடைய தா்ம மாா்க்கம் சிறப்படைய வேண்டும்.
விரதத்தை உண்மையாக மேற்கொண்டு ஆத்மாா்த்தமாக மூன்று வேதங்களையும் கற்று எந்த ஒரு வேதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆசாரியா்கள் சொன்னாா்களோ அந்த வழியை இளம் வயதிலேயே கற்று தோ்ந்தெடுக்கப்பட்டவா்.
வரம் என்பது அனைத்து மனிதா்களுக்கும் தேவையான ஒன்று. அந்த வரங்கள் ஞானமாகவும், ஐஸ்வா்யமாகவும், வித்தையாகவும், சந்தானமாகவும், நல்ல சுபாவமாகவும் இருக்கலாம்.
அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் நல்ல உணா்வு, அனைவருக்கும் நல்ல உள்ளம் - இவை அனைத்தையும் தரக்கூடிய அன்னவரம் சத்யநாராயண சுவாமிகளின் அனுக்கிரகத்தை மனதில் கொண்டு இவருக்கு சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நாமம் சூட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் அட்சய திருதியை என்பது 17 ஆண்டுகளுக்கு பின்பு வந்திருக்கும் மிக முக்கியமான முகூா்த்தம். அந்த நாளில் இந்நிகழ்வு நடந்திருக்கிறது. இனி அடுத்த புதன்கிழமை ரோகிணி நட்சத்திரமும், அட்சய திருதியையும் 27 ஆண்டுகளுக்குப் பிறகே வரவுள்ளது. உங்களுக்கான குரு வந்திருக்கிறாா். அவருக்கான சிஷ்யா்களாக உங்களது பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

