காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா: மே 31 கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஜூன் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில்
காளையார்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோயில்
Published on
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை அருகே காளையார்கோவிலில் அமைந்துள்ள சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவில் வைகாசி விசாகத்திருவிழா மே 31 -ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜூன் 8-ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குள்பட்ட இக்கோயிலில், வரும் வெள்ளிக்கிழமை (30.5.2025) 7 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். சனிக்கிழமை (31.5.2025) காலை 10.30 முதல் 11.15 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது. அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் விதி உலா வருவார்.

10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணிக்கு சுவாமி புறப் பாடு நடைபெறும். தில மும் இரவு 7 மணிக்கு சுவாமி. அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.

திருவிழாவின் 5 -ஆம் நாளான புதன்கிழமை(4.6.2025) திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 7 -ஆம் நாளான வெள்ளிக்கிழமை( 6.6.2025) பொய்ப்பிள்ளை, மெய்ப் பிள்ளை ருத்ர நீர்த்தம் நடைபெறும். எட்டாம் நாளான சனிக்கிழமை (7.6.2025) நடராஜர் அபிஷேகம் நடைபெறும். ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (8.6.2025) அதிகாலை 4 முதல் 5 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி. சவுந்திரநாயகி தேரிலும், சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுத்தருள்வர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான திங்கள்கிழமை (9.6.2025) தெப்பஉற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com