சிவபக்தர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான குணம் என்னவென்றால் எப்படியாவது அடிக்கடி ஆலயத்துக்குச் சென்று சிவனை கண்குளிர மனம் நெகிழ தரிசனம் செய்து விடுவர். சிவனை நினைக்காமல் ஒரு பொழுதும் அவர்களால் இருக்க முடியாது, சிவ சிவ என்று மனத்துக்குள் சொல்லில் கொண்டே சிவ பக்தியில் தங்கள் கவலைகளை மறப்பார்கள். ஆழமான இறைபக்தி இருப்பின், மலை போல வந்த பிரச்னைகள் யாவும் பனி போல் கரைந்துவிடும் என்பதை பலர் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்துள்ளார்கள்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பல பல நன்மைகளைப் பெறுவோம். சிவன் கோவிலில் நந்தி வழிபாடு என்பது தொன்றுதொட்டு நடந்து வருவது. அதுவும் பிரதோஷத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் அளப்பரிய நன்மைகளைப் பார்க்கலாம்.
நந்தியை வழிபட்டு சிவபெருமானின் அருளை அனுதினமும் பெறுவோம். ஓம் நமசிவாயா!