செவ்வாய் - கேது சூட்சம விளக்கம் 

ஜனன ஜாதக கட்டத்தில் தனித்த கிரகமும் மற்றும் சேர்க்கைபெற்ற கிரகங்களும் பலன்களை வெவ்வேறு வழியில் தர வல்லவர்கள்.
செவ்வாய் - கேது சூட்சம விளக்கம் 
செவ்வாய் - கேது சூட்சம விளக்கம் 

ஜனன ஜாதக கட்டத்தில் தனித்த கிரகமும் மற்றும் சேர்க்கைபெற்ற கிரகங்களும் பலன்களை வெவ்வேறு வழியில் தர வல்லவர்கள். ஒரு சில கிரகங்கள் தனித்து இருப்பது காட்டிலும் சேர்ந்து இருந்தால் அதீத நன்று. அதற்கு மாறாக ஒரு சில கிரகங்கள் திக் பலத்தோடு தனித்து இருப்பது நன்மை பயக்கும். இவற்றை அனைத்தும் ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். கிரகம் ஸ்புடத்தில் லக்கின ராசி பாகங்களுக்கு சமமான பக்கத்தில் இருந்தால் பூரண பலத்தை கொடுக்கும். சனியைப் போலவே ராகுவும், செவ்வாய் போல கேதுவும் பலனை தரவல்லவர்கள் என்று ஜோதிட கருத்து. அப்படியே எடுத்துக்கொண்டாலும் செவ்வாயும் கேதுவும் சேரும்போது செவ்வாயின் வீரியம் அதிகம் இருக்கும். அதேசமயம்  நன்மை சிறிதும் பாதிப்பும் அதிகம் செயல்படும்.

மங்களகாரகன் செவ்வாய் ஞானக்காரகன் கேது இணைவு பற்றிய பொதுவான விளக்கம் பார்க்கும் முன்பு இருவரின் தனித்தன்மை பார்த்தால் நாம் இருவரின் சேர்க்கை சூட்சம விதியை எளிதில் புரிந்துகொள்ள முடியும். முக்கியமாக செவ்வாய் என்பவர்  பலமாக இருந்தால் யாரும் செய்யமுடியாத கனரக வேலை, இயந்திரம் இயக்கும் பணியாளர்,  கனரக  பொருள்களின் விற்பனையாளர்கள், அரசு காவலர், அறுவைசிகிச்சை நிபுணர் என்று உயர்வர். இது தவிர சிகப்பு ரத்த அணுகளை குறிக்கும். நிலம், இளைய சகோதரர், தைரியம், வீரியம், முரட்டுப்பிடிவாதம், பேச்சில் நெருப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

கேது என்பவர் பூர்வப்புண்ணிய ஆசீர்வாதம், தெய்வீக அனுகூலம், குருவின் கடாட்சம் என்று நன்மையான காரகத்துவம் என்று கூறலாம். அதேசமயம்  முக்கிய நேரத்தில்   தடைக்கல், தேவையான செயல் நேரத்தில்  நிதானம் ஏற்படுத்தும். கேது என்பவர் எதை தடை செய்வார் என்பது அவரோடு சேரும் மற்றும் பார்க்கும் கிரகத்தின் தன்மை கொண்டு முடிவு செய்யப்படும். பிடிக்காமல் செய்வது அதாவது வேண்டா வெறுப்பு ஏற்படுத்துவத்தில் கேது வல்லவன்.   கேது என்பவன் வலை என்று பொருள் அதனால் கேது மறைமுகமாக வலை விரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவன்.  வழக்கு பஞ்சாயத்து அவருக்கு பிடித்த ஒன்று.

ஒருவரின் வேகம், உடலில் ரத்த கொதிப்பு ஏற்படுத்தும் காரணியாகவும் செவ்வாய் வேக கல்லாக செயல்படும். அங்கே ஒரு தடுப்பவராக கேது செயல்படுவார். அதற்குத்தான் வேகத்திற்கு முருகரையும்,  ஞானம் மற்றும்  நிதானம் கலந்த தனித்தன்மை விநாயகருக்கு கேதுவை சொல்லுகிறோம். நெருப்பு கிரகமான செவ்வாய் கேதுவோடு இணைவு பெற்றவர்கள் ஹனுமார் மற்றும் கோபம் கொண்ட முருகர், வினைதீர்க்கும் விநாயகரை வழிபட்டால் நன்று.
 
ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து தடங்கல்  ஏற்பட்டால், ஜாதகரின் கட்டத்தில் செவ்வாய் - கேது முக்கிய காரணி ஆகும். பல வருடங்களுக்கு ஒருமுறை தடங்கல் ஏற்பட்டால் இருவரின் கோச்சார தொடர்பு அந்த நேரத்தின் தசா புத்திக்கு ஏற்ப தடங்கல் ஏற்படுத்தும்.

ஜாதக கட்டத்தில் இருவரின் சேர்க்கை என்பது என்னென்ன பலன்களை பொதுவாக ஏற்படுத்தும் என்று ஒருசிலவற்றை பார்ப்போம். 

1.  நிலம் சார்ந்த வில்லங்கம்

இந்த இருவர் சேர்க்கை உள்ளவர்கள் நிலம் வாங்கும்போதெல்லாம் ஒரு வில்லங்கம் ஏற்படுத்தும். இந்த மாதிரி பிரச்சனை உள்ளவர்கள் நிலம் தன் பெயர்களில் வாங்க கூடாது.  சிலர் சுக்கிரன் நன்றாக இருந்தால் பிளாட் அல்லது கட்டிய வீட்டை வாங்க முயற்சி செய்யலாம். ஆனாலும் இவர்கள் வீடு வாங்கும் முன்பு இழுபறி இருக்க செய்யும். முக்கியமாக  இவர்கள் வீடு, நிலம் வாங்கும்பொழுது தாய் பத்திரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். முடிந்தால் 2 அல்லது 3 சட்ட கருத்துக்களை சரிபார்த்த பிறகு அசையா  சொத்துக்களை வாங்கலாம்.

2.  திருமண உறவு

மாங்கல்யக்காரகன் என்று கூறப்படும் செவ்வாய் பகவான் கேதுவுடன் சேரும்பொழுது திருமணத்தை தாமதம் செய்வார். சிலநேரங்களில் திருமணம் முடியும் நேரத்தில் தடையை ஏற்படுத்துவார். காதல் உறவில் வலை வீசி ஏமாற செய்வார்கள். 

பெண் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் கணவரை குறிக்கும். இந்த இடத்தில் பெண்ணிற்கு செவ்வாய் நெருங்கிய பாகையில் கேது இருக்கும் பொழுது கணவரோடு பிரச்சனை என்பது இருந்துகொண்டே இருக்கும். பெண்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கோடு போட்டு அவ்வழியே வாழ்வர்கள். வலைந்து கொடுக்காத தன்மை செவ்வாய் - கேது உருவாக்குவார். இது குடும்ப வாழ்க்கைக்கு சிலநேரம் சரிவராது. அதுவே பிரச்சனைக்கு மூல கூறு ஆகும். நீதிமன்றம், வழக்கு என்று விவாகரத்து பத்திரத்தை எடுத்து செல்லும் சூழல் ஏற்படும்.

3. முக்கியமாக அயன ஸ்தானத்தில் இவர்களின் சேர்க்கை என்பது தாம்பத்திய உறவில்  முடக்கம் இருக்கும்.  இன்னும் தீவிரமாக பார்த்தால் ஜாதகர் எதாவது ஒரு செயலுக்கு அடிமையாக இருப்பார். அது சூது அல்லது மாது மற்றும் இக்காலத்திற்கு ஏற்ப சொல்ல வேண்டுமானால் போன் மூலம் ரம்மி, விளையாட்டில் சுவாரசியம் அதிகம் ஏற்பட்டு மதியை (சந்திரன் துணையுடன்) மறக்கவைக்கும் அல்லது மழுங்கவைக்கும்.  

4. சகோதர உறவு விரிசல்

செவ்வாய் என்பவர் சகோதர உறவை குறிக்கும். அது மூன்றவது ஸ்தானத்தில் இருந்தால் அண்ணன் தங்கை உறவு நிரந்திரமாக பிரிக்கப்படும்.  சகோதர உறவில், பங்காளி உறவில் ஒருவித தவறான மனக்குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். முக்கியமான காலகட்டத்தில் சகோதர சகோதரி உறவில் விரிசல் ஏற்படுத்தும். அது நிலத்தின் உரிமைக்காக  நீதிமன்ற வாசலில் கூட நிற்க நேரிடும்.

5. தொழில் துறை

 உத்யோகம் என்றால் செவ்வாய் முக்கிய காரண கர்த்தா.  செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி செய்து தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுபத்துவம் பெற்று கேதுவுடன் சம்பந்தம் ஏற்பட்டால் இவர்கள் வக்கீல் துறையில் சரியாக வாக்குவாதம் செய்யும் திறன், நுணுக்கமான  விஷயங்கள் மறைமுகமாக செய்யும் உளவு துறையில் வல்லவராகவும், போலீஸ் மற்றும் ராணுவ துறை, மருத்துவ துறையில் திறமை மிக்கவராகவும் செயல்படுவார். ஆனாலும் சொந்த தொழில் அல்லது வேலையில் ஒருவித தடங்கல் இருக்கவும் செய்யும். முக்கியமாக இவர்கள் ஸ்திர லக்கின காரராக  இருந்து செவ்வாய் கேது சம்பந்தம் பெற்றால் இவர்கள் நிரந்தர சொந்த தொழில் செய்யாமல் இருப்பது நன்று. இவர்கள் ஜாதகத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் இந்த சேர்க்கை உள்ளவர்கள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இருக்கும். செவ்வாயின் தொழில்களில் இயந்திர துறை, ரியல் எஸ்டேட், சமையல் துறை முடக்கம் ஏற்படுத்தும். வேலையில் முன்னேற்ற முடியாத நிலை ஏற்படுத்தும்.

6.  நோய் சார்ந்த பிரச்னை

நோய்க்கு முக்கிய காரணி செவ்வாய். இவரோடு கேது சேரும் பொழுது உடற் உறுப்பில் குறை அல்லது சுருக்கம், ரத்த சோகை (சனி சப்பந்தம் அவசியம் ), சிகப்பு ரத்த அணுக்களில் குறைபாடு இருக்கும்.  முக்கியமாக 8ம், 12ம் பாவத்தில் இருவர் சேர்க்கை இருந்து அதெற்கெற்ப தசா புத்தி செயல் பட்டால் நோயின் வீரியம் மறைந்து அழிக்கும் தன்மை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக புற்றுநோய் போன்ற கொள்ளை நோய் ஏற்படுத்தும். அஷ்டமாதிபதி மாரகாதிபதி செவ்வாய் - கேது சம்பந்தம் பெற்றால், திடீரென ஆயுளை ஒருகை பார்த்துவிடும். இவற்றில் குருவின் கடாட்ச  பார்வை பெற்றால் ஆயுள் பங்கம் ஏற்பட்டு சரியாகவும் செய்யும். 

7. ஒருவரை கடைசி வரை வேண்டா வெறுப்பாக பார்க்கும் தன்மை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக செவ்வாய் - கேது - சுக்கிரன் உடன் சேரும் பொழுது களத்திரத்தை சுத்தமாக வெறுக்கும் தன்மை ஏற்படுத்தும். அது கிரகம் பாவம் கொண்டு உறவுமுறை மாறுபடும். இவர்கள் பேசும் தன்மை ஆன்மிகம் கலந்து அவருக்கு பிடித்த முறையில் பேசுவார்கள், அது மற்றவர்களுக்கு ஏற்றார் போல வளைந்துகொடுத்து பேசமாட்டார்கள் இது எதிரில் இருக்கும் நபர், இப்படி பேசுபவரை வெறுக்கும் அளவுக்கு இருக்கும். 

8. குழந்தை பேறு

இந்த சேர்க்கை என்பது ஐந்தாம் பாவத்தோடு சம்பந்த பெரும்பொழுது குழந்தை பேறு தாமதம் பெரும். புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். சிலநேரங்களில் சிறு மருத்துவ சிகிச்சை பெற்றால் தான் குழந்தை பேறு கிட்டும்.

8.  தன்னை சுற்றி சுத்தம் இல்லாத தன்மை, மறக்க வேண்டிய கெட்டதை நினைவுபடுத்தும் பேச்சு, தவறை வெளிப்படையாக பேசும் திறன்,  செய் நன்றி மறக்கும் தன்மை என்று இவர்கள் செய்யும் தவறாக இருக்கும்.

முக்கியமாக செவ்வாய் - கேது பற்றி புலிப்பாணி தன் பாடலில் செவ்வாய் மகாதிசை, கேது புத்திப்  காலங்களில் ஏற்படும் தீமைகளை  விளக்கியுள்ளார்.

ஆகுமே செவ்வாயில் கேதுபுத்தி 
ஆகாத நாளதுவும் நூற்றி  நாற்பத்தியேழு 
போதவே பலன் தனைப் பூட்டக்கேளு 
பூவையரும் புத்திரரும் வியாதியாகும் 
ஏகுமே வியாதியது கூடிக்கொல்லும் 
இன்பமுள்ளயின விரோதம் தானுமுண்டாம் 
சாகுமோ சத்துருவும் பிசாசுதானும் 
சஞ்சலங்க ளதனாலே கோடிதானே!  
          புலிப்பாணி 220


செவ்வாய் திசையில் கேது புத்திக்காலம் 147 நாள்களாகும். இவை ஆகாதவையே. இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: மனையில் நாகணவாய்ப்புள் போன்ற பூவையர்க்கும், புத்திரர்க்கும் வியாதி உண்டாகிப் பெருத்த துன்பம் கூடி, அதனால் மரணமும் நேரும். இதுவரை இன்பமுள்ள அனைத்தும் துன்பம் தரும். விரோதம் பெருகும். சத்துருக்களாலும் பிசாசு பயத்தாலும் துன்பங்கள் கோடி மிகும் என்பது புலிப்பாணி தன் பாடலில் கூறியுள்ளார். 

செவ்வாய் கேது சேர்க்கை என்பது ஜாதக கட்டத்தில், தசை புத்திகாலங்களில், கோட்சாரத்தில் வரும் காலம் கொஞ்சம் தடங்கல் ஏற்படுத்தும். எந்தவகை தடங்கல் பிரச்னை என்பதை அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் தொடர்பு, மற்றும் பாவத்தின் அடிப்படையில் என்னமாதிரி பிரச்னை என்று கூறமுடியும்.

ஜோதிட சிரோன்மணி தேவி 
வாட்ஸ்ஆப்: 8939115647
மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com