பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கடந்த 18-ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் நடைபெற்றது. இதையொட்டி ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறகிறது.
இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 6.15 மணி வரை வையாளி வகையறா பண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். இரவு 8.15 மணிக்கு மேல் உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது.
27-ம் தேதி தீர்த்தவாரியும், 28-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







