புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் வியாழக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை லெரின் டிரோஸ் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 436 ஆம் ஆண்டு திருவிழா வரும் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூலை 29 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், புதுநன்மை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் அன்னையின் திருவுருவப் பவனி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு கோட்டாறு ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் பகல் 12 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப் பவனி நடைபெறுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

பிளாஸ்ட் வசூல் அறிவிப்பு!

ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



