அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதி அறிவிப்பு
அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதியை அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறும் தேதியை அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜயனி, நாசிக் ஆகிய நகரங்களில் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலாகாபாத்தில் பூரண கும்பமேளா நடைபெறுகிறது.
இது தவிர 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாக்களின்போது
பக்தர்கள் நதிகளில் புனித நீராடுவது வழக்கம்.
அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி ஆகிய மூன்றும் கூடும் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.
2019-ம் ஆண்டு ஜனவரி 14/15 மகரசங்கராந்தி முதல் மார்ச் 04-ம் தேதி மகாசிவராத்திரி வரை பக்தர்கள் புனித நீராடலாம் என்று அலகாபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கும்பமேளாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...