மேஷ லக்னத்துக்குச் சனி, புதன், சுக்கிரன் இவர்கள் பாபிகள். குரு சூரியன் இவர்கள் சுபர்கள். சனி, குரு இவர்களின் சேர்க்கையால் மட்டும் சுபம் என்ற ராஜயோகம் உண்டாவதில்லை.
அந்தச் சனியின் சேர்க்கையால் குருவுக்குப் பாபியாயிருக்கும் தன்மையும் உண்டாகிறது. மாரகனாகக் கூறப்பட்ட சுக்கிரன் நேரில் மாரகனாக ஆகிறான்.
சனி, புதன், சுக்கிரன் என்ற இந்தப் பாபக் கிரகங்களும் மாரகர்களாகவே ஆகின்றனர். ஆகவே மேஷ லக்கின ஜாதகனுக்கு இங்கு கூறியதைக் கொண்டு சுபாசுப பலன்களை யூகித்து அறியலாம்.