

நாவலூர் பகுதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உற்சவருக்கு கார்த்திகை மாத கடைசி திங்கள்கிழமையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம் சொரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் பகுதியில் பழைமையான காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தை முன்னிட்டு மாகான்யம் முரளிதர சுவாமி ஆசிரமம் சார்பில் பம்மல் பாலாஜி தலைமையில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நிகழ்வில் சந்திரசேகர சிவாச்சாரியார், ரஞ்சித் சிவாச்சாரியார் மற்றும் நாவலூர் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.