ஆணவத்தையும் கர்வத்தையும் அழித்து வெற்றிதரும் திருச்செந்தூர்: உங்கள் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருக்கா?

இன்று வாழ்க்கையில் பல பேர் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னையுடன் சுற்றிக்கொண்டிருக்கும்
ஆணவத்தையும் கர்வத்தையும் அழித்து வெற்றிதரும் திருச்செந்தூர்: உங்கள் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருக்கா?

இன்று வாழ்க்கையில் பல பேர் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை, திருமண வாழ்வில் கணவன் மனைவியிடத்தில் பிரச்னை, வியாபாரத்தில் பிரச்னை, விளையாட்டில் பிரச்னை, காதலில் பிரச்னை, தகப்பன் மகன் உறவில் பிரச்னை,  ஆன்மீகத்தில் பிரச்னை, அரசியலில் பிரச்னை, ஒரு நாடு மற்றொரு நாட்டோடு பிரச்னை என எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவித பிரச்னையோடு வாழ்ந்துவருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒவ்வொருவருடைய மனத்திலிருந்தும் குறிப்பிட்ட இவ்வழுக்குகள் நீங்கினால் வீட்டிலும் நாட்டிலும் அமைதி சாந்தி சமாதானம் போன்றவை துலக்கமுடன் ஒளிவீசும் எனலாம். அகங்காரம், மமகாரம் ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவையாம். மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னைத் தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு  நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில்  நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை. மன்னிப்பும், நகைச்சுவையும் இவ்விரண்டும் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாகும். அகங்காரம் செயல்களை  உருவாக்குகிறது. தவறுகளுக்குத் தண்டனை வழங்குகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகிறது. விருப்பத்தைத் தோற்றுவிக்கிறது. மன்னிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதால் அகங்காரத்தைக் கட்டுப்படுத்தும். நாம்  நமது அகங்காரத்தை குறைத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என ஆன்மீக பெரியோர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த  அகங்காரத்தையும் மம காரத்தையும் ஆங்கிலத்தில் ஈகோ என குறிப்பிடுகிறார்கள்.

ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாகப் பேசுவார்கள். மன  அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. அவஸ்தைப்பட நேரிடும்.  பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது. இவர்களை விட்டு விலகினால்தான் அமைதி திரும்பும்.

ஜோதிடத்தில் அகங்காரமும் மமகாரமும்

ஜோதிடத்தில் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் மமகாரத்தையும் குறிக்கும் பாவம்  லக்னபாவம் எனக் குறிப்பிடுகிறது. ஒருவர் ஜாதகத்தில் சூரியனது வீடு லக்னமாகவோ, ராசியாகவோ அமைந்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் சூரியன் ஆத்மகாரகனாக அமைந்துவிட்டாலும் லக்னத்திற்கு சூரியன் பார்வை பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு அகங்காரம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் சூரியனை குரு பார்த்துவிட்டாலும் குருவை சூரியன் பார்த்துவிட்டாலும் அகங்காரம் தகர்ந்துவிடும். சூரியன் ஆட்சி உச்சம் பெறும் மேஷமும் சிம்மமும் லக்னமாகவோ ராசியாகவோ அமைந்தவர்களுக்கு இயல்பாகவே கர்வம் சிறிது கூடவே அமைந்துவிடும்.

சூரியன் எந்தக் கிரகத்தில் நிற்கிறது என்பதைப் பொருத்தும் எந்தக் கிரகத்தோடு சேர்க்கை பெறுகிறது என்பதைப் பொறுத்தும் அகங்காரம் அமைந்துவிடுகிறது. சூரியன் புதன் சுக்கிரன் இம்மூன்றும் முக்கூட்டு  கிரகங்கள் எனப்படும். இவை மூன்றும் குறிப்பிட்ட பாகையில் இடைவிடாமல் ஒன்றைஒன்று தொடர்ந்து இணைந்தே செல்லும்.

ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்றுவிட்டால் அவர்களுக்கு அறிவு சார்ந்த கர்வம் மற்றும் அகங்காரம் ஏற்பட்டுவிடும். உலகில் உள்ள 95% பேருக்கு இந்த புத ஆதித்ய யோகம் அமைந்துவிடும். அனைவருக்கும் கல்வியறிவு பெறவேண்டும் எனும் இறைவனின் கருனையால் ஏற்பட்ட இந்த யோகம் உலகில் பலரையும் அகங்காரத்தோடு விளங்கக்  காரணமாகிவிடுகிறது.

புத ஆதித்ய யோகத்தினால் அனைவருக்கும் அகங்காரம் ஏற்பட்டாலும் சூரியனுக்கு முன்னும் பின்னும் புதன் நிற்கும் நிலையை பொறுத்து அங்காரத்தின் விளைவுகள் மாறுபட்டு அமைந்துவிடும். இன்று  சமூகத்தில் கல்வியில் சிறந்தவர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள் இவர்களுக்குள் எப்போதும் ஒரு கர்வ நிலை இருப்பதற்கு இதுவே ஒரு காரணமாகிவிடுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு செல்வ செழிப்பினால் கர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. சூரியனைக் கடந்து சுக்கிரன் நின்று சுப வெசி யோகம் ஏற்படும்போது அவர்களுக்கு செல்வ உயர்வு  நிலை ஏற்படுவதோடு செல்வத்தால் சிறிது செருக்கு ஏற்படவும் தவறுவதில்லை. 

சூரியனுடன் சேரும் கிரகத்தைப் பொருத்து அமையும் அகங்காரத்தின் தன்மை:

சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.

சூரியன் சந்திரன் சேர்க்கையால் ஏற்படும் அமாவாசை யோகமும் பௌர்ணமி யோகமும் பல பதவிகளைத் தந்து உயர்வை ஏற்படுத்தினாலும், பதவியினால் சிறிது அகங்காரத்தையும் தந்துவிடுகிறது.

சூரியன்-செவ்வாய் இரண்டும் நெருப்பு கிரஹங்களாகவும் அரசியல், அதிகாரம் போன்றவற்றின் காரக கிரஹமாகவும் விளங்குவதால் சாதாரணமாகவே சூரிய-செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் ஈகோ நிறைந்தவர்களாகக் காணப்படுவர். அதிலும் மேஷ ராசி/லக்னம் அமைந்து சூரியன் உச்சம் பெற்றுவிட்டால் அவ்வளவுதான், என்றாலும் இவர்களது சேர்க்கை சொத்து ரியல் எஸ்டேட் ஆகிய விஷயங்களில்  அகங்காரம் மற்றும் மமகாரத்தை ஏற்படுத்திவிடுகிறது.

சூரியன் புதன் சேர்க்கை கல்வியறிவு, வியாபாரம் ஆகியவற்றின் காரணமாக அகங்காரம் அமைந்துவிடுகிறது. 
 
சூரியன் குரு சேர்க்கை உயர்நிலை ஆன்மீகத்தை தந்தாலும் இருவரில் ஒருவர் 6/8/12 அதிபதிகளாகிவிட்டால் ஆன்மீகத்தில் கர்வம் ஏற்படக் காரணமாகிவிடுகிறது.

சூரியன் சுக்கிரன் இணைவு பணம், செல்வ நிலை பெண்கள் ஆகியவற்றில் செழிப்பை ஏற்படுத்தி அகங்காரத்தால் பிரச்னைகளையும் தந்துவிடுகிறது. சூரியன் சுக்கிரனின் வீட்டில் நீசமடைந்துவிடுவதால்  சுக்கிரனோடு இணைவு கர்வ பங்கத்தை ஏற்படுத்திவிடும்.

சூரியனோடு சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" என குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது.

கேதுவிற்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அகங்காரம் மமகாரம் அழிக்கும் திருச்செந்தூர்

சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது.  சூரபத்மனின் ஒரு பாதி ‘நான்’ எனும் அகங்காரம், மறுபாதி ‘எனது’ எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின்  வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

அகங்காரம் நீங்கப் பரிகாரங்கள்

அகங்காரம் ஒழிய ஆன்மீகமும் தண்டனையும் வழிசெய்கிறது. எல்லா நேரங்களில் தண்டனை ஏற்புடையதாக இருக்காது என்பதால் ஆன்மீக வழி சிறந்தது என ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆன்மீக வழியில் விநாயகருக்கு "சுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் ஜ்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தையே" எனக் குட்டிக்கொள்வதும் தோபிகரணம் எனும் யோக பயிற்சியும் செய்வது அகங்காரத்தை அழிக்கும் என ஆன்மீகம் தெரிவிக்கிறது.

கேதுவிற்கு அதிதேவதை விநாயகர் என்பதும் சூரியனோடு கேது சேர்க்கை கர்வபங்கம் ஏற்படும் என மேலே குறிப்பிட்டிருப்பதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வேலூர் மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ளது பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில். சைவம் மற்றும் வைணவத்தை ஒருங்கிணைக்கும் ஆலயமாக இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் எங்கும் இல்லாத புதுமையாக சிவலிங்கம் இருக்கும் ஆவுடையாரின் மீது பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் திருத்தலம் 108 திவ்ய தேசங்களில்,  107-வது தலமாக திகழ்கிறது.

இந்த ஆலயம் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. ஒரு முறை, சந்திர பகவான் பெற்ற சாபத்தினால் அவரது ஒளியும், அவரது கலைகளும் மறையத் தொடங்கின. இதைக் கண்டு வேதனையடைந்த சந்திரனின் மனைவிகளில் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி, இந்த தலம் வந்து பெருமாளை வணங்கி, தவம் செய்தாள். இதையடுத்து பெருமாள் நேரில் காட்சி தந்து, சந்திர பகவானுக்கு சாபவிமோசனம் அளித்து அருள்புரிந்தார். அது முதற்கொண்டு இந்தத்தலம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு பரிகார தலமாக உள்ளது. இங்கு தரிசிப்போருக்கு சந்திராஷ்டம தோஷங்கள்,  மனக் குழப்பங்கள், நட்சத்திர தோஷங்கள், செவ்வாய் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

மேலும் புத்திகாரகரான புதனின் அதிதேவதையான விஷ்ணுவின் நக்‌ஷத்திர நாளில் ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேச பெருமாளை தரிசிப்பது அகங்காரம், மமகாரம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும் என்பது நிதர்சனம். மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி மூன்றடி மண் பெற்ற நாளும் ஒரு திருவோண நாள் தான் என்பது கூடுதல் தகவலாகும். மேலும் இன்றைய கோச்சாரத்தில் சந்திர பகவான் திருவோண நக்ஷத்திரத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com