சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நள்ளாறு தியாகேசா பக்தி முழக்கத்துடன் திருநள்ளாறில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

News image
Updated On :12 ஜூன் 2019, 10:52 am

தினமணி

திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயில் பிரமோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேசுவரர் திருக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் விளங்குகிறார். அதன்படி,  இந்தாண்டுக்கான தேரோட்ட திருவிழா கடந்த மே மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (ஜூன் 12) தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி செண்பக தியாகராஜர் உன்மத்த  நடனமாடி திருத்தேருக்கு எழுந்தருளச் சிறப்புப் பூஜைகளுடன் தேர் புறப்பட்டது. 

தொடர்ந்து, அம்பாள் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர்கள் தனித்தனியாகப் பவனி வந்தனர். "நள்ளாறு தியாகேசா" எனப் பக்தர்கள் பக்தி முழக்கமிட்டபடி  தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துவந்தனர். இதையொட்டி அங்குப் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.