

திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவனின் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாதந்தோறும் பௌர்ணமி அன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
இந்த நிலையில், பங்குனி மாதப் பௌர்ணமி புதன்கிழமை (மார்ச் 20) காலை 10.03 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை (மார்ச் 21) காலை 7.41மணிக்கு முடிகிறது.
எனவே, பக்தர்கள் அந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.