அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பங்குனி உத்திரத்துக்கு பழனி மலைக்கோயிலுக்குச் செல்பவர்களா நீங்கள்?

பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்..

News image
Updated On :20 மார்ச் 2019, 11:22 am IST

பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விஐபி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் முக்கிய விழா நாள்களில் முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏ மற்றும் எம்பி.,க்களிடம் கடிதம் பெற்று வருபவர்களுக்கு ரோப்கார், வின்ச்சுகளில் செல்ல முன்னுரிமை அளிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிப்பது வழக்கம்.  

இதுபோன்ற நேரங்களில் கோயில் ஊழியர்களுக்கும், வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்க இயலாது என கோயில் நிர்வாகம் பதாகைகள் வைத்துள்ளது.  

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி சந்நிதி வீதி, கிரிவீதி உலா  எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோயிலில் கோயில் நிர்வாகம் சார்பில்  சின்னக்குமாரசாமி தங்க ரதத்தில் உலா எழுந்தருளினார். 

பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இன்று திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான நான்கு நாள்களுக்கு மலைக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மலைக்கோயிலில் வழக்கம் போல் தங்கத்தேர் உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.