இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 26 - மே 2) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (ஏப்ரல் 26 - மே 2) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை தாராளமாக இருக்கும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பேச்சில் சூடான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். இறைவழிபாட்டைக் கூட்டிக்கொண்டால்  மலைபோல் வரும் துன்பங்கள் பனி போல் விலகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். செய்கிற வேலைகளில் சிறுசிறு குறைகள் உண்டாகும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாகத் திருப்பங்கள் உண்டாகும்.  விவசாயிகள் வருமானத்தைக் கூறு போட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளே அடங்கிப்போகும் அளவுக்கு காலகட்டம் சாதகமாக உள்ளது. கட்சி மேலிடம் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே வெற்றி கிடைக்கும். பணவரவு சற்று தாமதமானாலும் கிடைத்துவிடும். 

பெண்மணிகள் கணவரிடம் அன்போடு நடந்து கொள்வார்கள். குழந்தைகளால் பெருமை அடைவார்கள். 

மாணவமணிகள் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். 

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்களால் உதவிகள் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தை வழி சொத்துகளில் சிறு வில்லங்கம் உண்டானாலும் பின்னர் சரியாகி விடும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். பணவரவு இரட்டிப்பாக அமையும். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 
வியாபாரிகளுக்கு பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். புதிய சந்தைகளை நாடிச்செல்வீர்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். புதிய குத்தகைகள் மூலம் வருமானம் வரும். 

அரசியல்வாதிகளின் சேவைகளில் சிறிய குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமாக செயல்படவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். எவருடனும் கூட்டு சேராமல் தனித்தே செல்படுவது நல்லது.

பெண்மணிகளுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். அனைவரும் நட்புக் கரம் நீட்டுவர். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையை வழிபட்டு நலம் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 26, 28.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சியை காண்பீர்கள். எடுத்த செயல்களில் மெதுவாகவே வெற்றி கிடைக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். சமூகத்திற்குத் தேவையான சேவைகளில் ஈடுபட்டு உங்களை பிரபலபடுத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முயற்சி செய்யவும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருக்க மாட்டார்கள். வியாபாரிகள் தங்கள் உழைப்பால் அரிய சாதனைகளைச் செய்வார்கள். கொடுக்கல் வாங்கல்  போன்ற  விஷயங்களும் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பணவரவும் நன்றாக இருக்கும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படும். எதையும் புரிந்து செயல்படவும். 
மாணவமணிகள் கல்வியில் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடவும். வருங்கால தேர்வுகளில் வெற்றி பெற தற்போதைய பயிற்சிகள் உதவும். 

பரிகாரம்: ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை தரிசனம் செய்யுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 29, 30. 

சந்திராஷ்டமம்:  26, 27, 28.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். புதிய நட்புகள் உருவாகும். முயற்சிகள் வெற்றியைத் தரும். உற்றார் உறவினர்களின் சுயநலப் போக்கை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். மனச்சோர்வுக்கு ஆளாகாமல் உழைப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பார்கள். பணவரவுக்கும் தடைகள் வராது.  சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை நல்ல முறையிலேயே இருக்கும். சற்று தாமதமானாலும் வரவேண்டிய பணம் வந்து சேரும். விவசாயிகள் கொள்முதல் லாபத்தை அள்ளுவார்கள். உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சிறப்பாகவே அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும்.

பரிகாரம்: தினமும் ராம பக்த அனுமனை ராம நாமம் சொல்லி வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: 29, 30.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

துன்பங்கள் குறைந்து இன்பங்கள் படிப்படியாக வளரும். வருமானம் நன்றாக இருக்கும். செல்வாக்கு உயரும். பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள்.  உடல் வளம், மன நலம் சிறக்க யோகா, பிராணாயாமம் செய்யவும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை குறித்த காலத்திற்குள் முடித்து நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள். மேலதிகாரிகளால் தொல்லை இருக்காது. வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவார்கள். பேச்சுத் திறமையினால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாக இருக்கும். பழைய குத்தகைகளைச் சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு. 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பார்வையில் படாமல் சிறப்பாக பணியாற்றுவீர்கள். எதிரிகளின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கத் தாமதமாகும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு சீராகும். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவமணிகள் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:  மகாலட்சுமியையும் விநாயகரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 29. 

சந்திராஷ்டமம்: 1, 2.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செயல்கள் அனைத்தும் குறுகிய காலத்திற்குள் முடிவடையும்.  தேவைக்கேற்ப பணவரவு உண்டாகும். நெடுநாளாக தள்ளி வைத்திருந்த பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக வளரும். வியாபாரிகள் வியாபாரத்தில் சற்று மந்த நிலையை காண்பார்கள். அதனால் கொடுக்கல் வாங்கல்களில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். 

விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்கும் எண்ணங்கள் மேலோங்கும்.

அரசியல்வாதிகள் மீது வீண் பழி விழும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று உங்கள் செயலை செய்யுங்கள். உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமம் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமையில் சில பாதிப்புகள் ஏற்படும். மாணவமணிகள் பெற்றோர்,  சகோதரர்களால் நன்மை அடைவார்கள்.

பரிகாரம்: வெள்ளியன்று பெருமாள் கோயிலில் தாயாரை தரிசனம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 30. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் எதிர்பார்த்த முடிவைக் கொடுக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளியூர் பயணங்கள் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் லாபம் பெருகும்.

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிக்குப்
பிறகே வெற்றி கிட்டும். 

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். மாணவமணிகளுக்கு இது சிறப்பான காலமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:  தட்சிணாமூர்த்தியையும் துர்க்கையையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரத்தில் சிறப்புகள் கூடும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடைவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி  வருமானத்தைப் பெருக்க நினைப்பார்கள். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதலில் சீரான லாபம் தென்படும். கால்நடை பராமரிப்புச் செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும்.

அரசியல்வாதிகள் திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல்கள் தென்படும்.  இறுதியில் வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு உடல்நலம் சற்று பாதிக்கப்படலாம். கணவருடனான ஒற்றுமையும் சுமாராகவே இருக்கும். மாணவமணிகள்படிப்பில் அதிகம் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளிடமிருந்து எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோரும் அன்புக்கரம் நீட்டுவர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். மேலதிகாரிகளின் மூலம் சிறு சஞ்சலங்கள் உண்டாகும். வியாபாரிகள் ஆலோசனைகளைக் கூட்டாளிகள் பரிவுடன் கேட்பார்கள். தொழிலை விஸ்தரிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். மகசூல் அதிகரித்து  நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்து கொள்ளும். இதனால் புதிய பணிகளில் ஈடுபடுவார்கள். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பணவரவில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் சரியாகக் கிடைத்துவிடும். பெண்மணிகளுக்கு கணவரின்அன்பும் பாசமும் அதிகமாகவே கிடைக்கும். மாணவமணிகளுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும். 

பரிகாரம்: காலபைரவரையும் சனீஸ்வரரையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலைகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். மனதில் இருந்த  கவலைகள் நீங்கும். பயணங்களால் நன்மை கிடைக்காது. மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் முன்னறிவிப்பில்லாத சில வேலைகளைச் செய்ய நேரிடும். இதனால் அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபங்கள் கூடும். குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப்பயிர்களை செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்து வந்த தடைகள் நீங்கும். கட்சி மேலிடத்தின் ஆசி கிடைத்து புதிய பதவிகளில் அமர்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். 

பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பதில் சற்று சிரமப்படுவீர்கள். குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் வராது. மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் பெருமாளையும் சனீஸ்வரரையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 29, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பெரிய மாற்றங்கள் நிகழும். அறிவும் ஆற்றலும் பளிச்சிடும். வெற்றிகள் குவியும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டானாலும் முடிவு சாதகமாகவே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் பற்றும் பாசமும் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையுடன் பழகவும். மேலதிகாரிகளால் பெரிய பாதிப்பு இல்லை. வியாபாரிகள் திட்டம் போட்டு சரியான லாபத்தை அள்ளுவார்கள். பிரயாணங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை செலுத்தவும். போட்டிக்குத் தகுந்தாற்போல் விற்பனை செய்தால் லாபம் பெருகும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மேல் விழும். கலைத்துறையினர் மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவமணிகளுக்கு பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கநாதரையும் சனீஸ்வரரையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 28, 1 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தைரியங்கள் கூடும். பொருளாதார நிலைமை திருப்தி தரும். பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சுபச் செய்திகளால் மனம் நிம்மதி அடையும். குடும்பத்தாரிடம் உங்கள் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளும் ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாகவே இருக்கும். கூட்டாளிகளிடம் நல்லமுறையில் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். புதிய குத்தகைகள் தேடி வரும். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கட்சியிலும் வெளியிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் மோதல் வேண்டாம். கலைத்துறையினர் தங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் மனதிற்கினிய பயணங்கள் செய்வீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளையும் மகாலட்சுமியையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 2.

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com