சதுரகிரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசை வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. 
சதுரகிரியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்


சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தை அமாவாசை வழிபாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. 

தை அமாவாசையொட்டி பிப்ரவரி 2-ம் தேதி முதல் பக்தர்கள் சதுகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை 6 மணிமுதல் தாணிப்பாறையில் குவியத் துவங்கினர். 

அதிகாலை சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி கோயில்களில் மூலவர்களுக்கு பல்வேறு அபிகேஷகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். 

ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com