எண்கணிதப்படி ஜனவரி மாதம் எந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம்?

ஜனவரி மாத எண்கணித பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்..
எண்கணிதப்படி ஜனவரி மாதம் எந்த எண்ணுக்கு அதிர்ஷ்டம்?

ஜனவரி மாதம் எண்கணிதப்படி எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தனது பாசமான குணத்தாலும் அனைவரையும் கட்டிப்போடும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் தெளிவு ஏற்படும். பணவரவு நடுநிலையில் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.  

சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் மிகுதியாக இருக்கும். நிதானமான பேச்சு நன்மையாகும். பொருட்களை கையாளுவதில் கவனம் அவசியம். 

தொழில் வியாபாரத்தில் திடீர் மாறுதல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கடுமையாக வேலைபளுவால் கடினமான மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். 

பெண்களுக்கு நல்ல குணத்துடன்  ஆரோகியத்துடனும் வாழ்வார்கள். கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்களில் கொஞ்சம் தேவை. 

அரசியல்துறையினர் மேலாதிகாரிகளின் கோபமான  பேச்சுவார்கள்.  மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். 

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.

{pagination-pagination}

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்களது திறமையால் லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும்.  குடும்பத்தில் உள்ள்வர்கள் மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். 

உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வீடு சம்பந்தமான இனங்களில் சிறிது சுணக்க நிலை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். 

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். 
பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.  கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். 
அரசியல்துறையினர் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்:  மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

{pagination-pagination}

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நிதானமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும்.

வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு குறையும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். 

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. 

அரசியல்வாதிகள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் கருடபகவானை தரிசித்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.

{pagination-pagination}
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆசைகள் அனைத்தையும் தனது புத்தியால் செய்துக்கொள்ளும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் தடை ஏற்படலாம். 

தொழில் வியாபாரத்தில் சாதகமான சுழ்நிலை அமைந்திருக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். 

பெண்களுக்கு  காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. 
அரசியல்துறையினர் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். 

பரிகாரம்: காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

{pagination-pagination}
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் ஆர்வத்துடன் காணப்படும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்களின் பொறுப்புகள் சரிவர நிறைவேற்ற முயற்றிச்சி செய்வீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை குடும்ப நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனகசப்புகள் வந்து நீங்கும். 

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய செய்தி வரும். லாபம் அதிகரிக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் வரும். அலுவலகத்தில் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். 

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு சுபச்செலவுகள் உண்டாகும். வீண்கவலை நீங்கும். 

அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்: பெருமாளுக்கு திருமஞ்சணம் செய்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

{pagination-pagination}
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வரும் ஆர்வம் கொண்ட ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்கள் வேலையை சாதாரனமாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுமைகள் கூடலாம். 

தொழில் வியாபாரத்தில் சுமாரான சூழ்நிலை இருக்கும். கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் ஆர்வாமாக இருப்பார்கள். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். 
அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். 

பெண்களுக்கு தன்னிச்சையாகவே செயல்பட்டு முன்னேறுவார்கள். கலைத்துறையினர் தங்களின் துறையில் அதிக ஆர்வாமாக இருப்பர். 

அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்:  ஐயப்பனை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

{pagination-pagination}

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உன்மை உழைப்பு உயர்வு ஆகிய விஷயங்களில் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் சுமாராகாவே இருக்கும். சொத்துக்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமாதமாகவே கிடைக்கும். 

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஆரம்பம் இருக்கும் பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு முயற்ச்சியில் நல்ல பலன் உண்டாகும். கலைத்துறையினருக்கு வேலைகளில் கடின உழைப்பு இருக்கும். 
அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். 

பரிகாரம்: ஸ்ரீமஹாகணபதிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

{pagination-pagination}
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உழைப்பின் வடிவமாகவே இருக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியத்தில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பு ஏற்படும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணப்புழக்கம் சுமாராகவே இருக்கும். 

தொழில் வியாபாரம் கைக்கூடி வாராலாம். வேளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சகஜமாக உரையாடுவார்கள் அலுவலக பணிகளை மிக எளிதில் சாதார்னமாக இருக்கும். குடும்பத்தில் கவனம் நிறைந்திருக்கு. நண்பர்கள் உறவினர்களிடம் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  சாதகமாகவே இருக்கும். 
அரசியல்வாதிகளுக்கு காரியங்கள் சித்தியாகும். 

மாணவர்களுக்கு  கல்வியில்  கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். 

பரிகாரம்: வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

{pagination-pagination}

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உங்கள் வாழ்கையில் ஆற்றளும் சுறு சுறுப்பும் நிறைந்தவர்களாக இருக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் அலைச்சல்கள் நிறைந்தாகவே இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரவு சுமராகவே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட முடியும். 

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களின் வாக்கை மதித்து நடப்பார்கள் இருக்கும். புதிய வேலைவாய்ப்பும் உங்களை தேடி வாரலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் கலந்ததாகவே இருக்கும். குடும்பத்தினருக்கு தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. 

பெண்களுக்கு வேலை பளு கூடூம் சற்று கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சொந்த தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. 

அரசியல்வாதிகள் தங்களின் பதவியை தக்கவைத்துக்கொள்ள் பாடுபடவேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்: சிவன் கோவிலை தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com