பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

விமானத்தில் வீதி உலா வரவிருக்கும் திருச்செந்தூர் முருகன்!

திருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம் செய்து சாதனை படைத்துள்ளார் சிற்பக்கலை சிற்பி விஜயகுமார். 

Published On :7 பிப்ரவரி 2024, 3:37 pm IST

திருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம் செய்து சாதனை படைத்துள்ளார் சிற்பக்கலை சிற்பி விஜயகுமார். 

கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோயில் சிலைகள் செய்வதற்குப் பிரபலம். இவ்வூரில் சோழசிற்பக் கலைக்கூடம் உள்ளது. இதன் உரிமையாளர் விஜயகுமார். புது டெல்லியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்றார். சிற்பக்கலை பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார். 

இந்நிலையில், திருச்செந்தூரில் உள்ள பழமையான குமரன் கோயில் திருவிழாவில் சுவாமி வீதிவுலா புறப்பாட்டிற்காக இதுவரை யாரும் செய்யாத வகையில் ஏரோப்பிளைன்  வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார். 200 கிலோ எடையுள்ள பித்தளைகளைக் கொண்டு விமானம் வடிவத்தில் ஐந்தரை அடி அகலம், ஆறு அடி நீளத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் விஜயகுமார் ஸ்தபதி தலைமையில் ஐந்து பேர் கொண்டு குழுவினர் 2 மாதங்களாக இப்பணியைச் செய்து முடித்துள்ளனர்.

பணிகள் முடிவடைந்த நிலையில் திருச்செந்தூர் குமரன் கோயிலுக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. எதிர்வரும் திருச்செந்தூர் திருவிழாவில் சுவாமி புறப்பாட்டிற்குப்  பயன்படுத்த உள்ளனர். 

இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், 

சிற்பக்கலையில் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து இது தயாரிக்கப்பட்டது. விமானம் முழுவதும் பித்தளையால் ஆனது. இந்தியாவில் கடவுளுக்குப் பித்தளை விமானம் வாகனமாக அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது முழுக்க முழுக்க கையால் செய்யப்பட்டது என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.