திருச்சி அரியமங்கலம் காளி கோயிலில் அஹோரிகள் சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியையொட்டி திருச்சி அரியமங்கலம் காளி கோயிலில் அஹோரிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தினர்.
திருச்சி அரியமங்கலம் காளி கோயிலில் அஹோரிகள் சிறப்பு பூஜை
Updated on
1 min read

மகா சிவராத்திரியையொட்டி திருச்சி அரியமங்கலம் காளி கோயிலில் அஹோரிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சிறப்பு பூஜை நடத்தினர்.

உய்யக்கொண்டான் ஆற்றங்கரையிலுள்ள இக்கோயில் அஹோரி மணிகண்டன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 20க்கும் மேற்பட்ட அஹோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு  பூஜையில் பங்கேற்றனர்.

ஜெய் அஹோர காளிக்கும், கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏராளமானோர் சிவராத்திரி பூஜையில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com