
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஏனாதிநாத நாயனாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சாா்பில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதா் கோயிலில் புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் ஏனாதிநாத நாயனாா் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகா் பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி நடைபெற்றது.
குருபூஜை விழாவில் ஏனாதிநாத நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.