மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருமலையில் திருப்பாவை பாராயணம் நடக்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் மாா்கழி மாதங்களில் அதிகாலை நடக்கும் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி வரும் 16ஆம் தேதி மாா்கழி மாதம் தொடங்க உள்ளதால், சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட உள்ளன.
திருமலை, திருப்பதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள 141 தேவஸ்தான மையங்களில் ஆச்சாரியாா்கள் டிச.16 முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை திருப்பாவை பாசுரங்களின் பாராயணத்தை நடத்தி, அதற்கான விளக்கவுரையும் வழங்குவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.