அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவருமாம் இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஜன.29 - பிப்.4)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (ஜன.29 - பிப்.4) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவருமாம் இவர்களுக்கு: வாரப் பலன்கள் (ஜன.29 - பிப்.4)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (ஜன.29 - பிப்.4) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளை சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் தராமல் உழைக்கவும். 

வியாபாரிகளுக்கு லாபம் கூடும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். விவசாய உபகரணங்களுக்குச் சற்று கூடுதல் செலவு செய்ய நேரிடலாம். 

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினரின் பெயரும், புகழும் கூடும். ரசிகர் மன்றங்களுக்குச் சற்று கூடுதலாக செலவு செய்து மகிழ்வீர்கள்.

பெண்மணிகள் கணவரிடம் பாராட்டுகளைப் பெறுவார்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவமணிகள் நன்கு படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: ராமபிரானை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 29. 
சந்திராஷ்டமம்:  இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குழப்பங்கள், அனாவசிய சிந்தனைகள் எதுவும் வேண்டாம். சுறுசுறுப்பாகவும், கடினமாகவும் உழைப்பீர்கள். மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடிவரும்.

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். சிலர் வெளியூருக்கு மாற்றலாகிச் செல்லும் நிலை ஏற்படும். வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். அதேநேரம் புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் புதிய பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள். புதிய குத்தகைகளும் கை வந்து சேரும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். தொண்டர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். சக கலைஞர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். சுப காரியங்களிலும் பங்கு கொள்வார்கள். மாணவமணிகள் சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். எவரிடமும் சண்டை சச்சரவு என்று எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 30. 
சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உடல் நலம் சீராக இருக்கும். செய்தொழிலில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வியாபாரிகள் கொள்முதலில் லாபம் காண்பார்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவார்கள். சக விவசாயிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயிப்பீர்கள். 

அரசியல்வாதிகள் அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேரிடும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினர் எடுத்துக் கொண்ட வாய்ப்புகளைச் சரியாக செய்து முடிப்பார்கள். ரசிகர்களின் அலட்சியத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். பெண்மணிகள் உற்சாகத்துடன் தங்கள் காரியங்களில் ஈடுபடுவார்கள். பணவரவு சீராகும். மாணவமணிகள் கடினமாக உழைத்து எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுப்பார்கள். பெற்றோர்களும், ஆசிரியர்களும் உங்களுக்கு ஆதரவு நல்குவார்கள்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 30. 
சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் பலிதமாகும். இழுபறியாக இருந்த அரசு விவகாரங்களில் முடிவு தென்படும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். போட்டி பந்தயங்களிலும் வெற்றி காண்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை நன்றாகப் புரிந்து கொண்டு செய்து முடிப்பார்கள். அதேநேரம் மனதில் சிறிது அச்ச உணர்வு தொடரும். வியாபாரிகளின் முயற்சிகளுக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலிகல் இருந்த சிரமங்கள் குறையும். பணவரவு சீராகவே தொடரும். விவசாயிகளுக்கு மகசூலில் லாபம் குறைந்தாலும் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வீர்கள். நீர்வரத்தும் குறைவாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு உற்சாகப்படுத்தும். கட்சியில் பொறுப்பு கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பணவரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்து காணப்படும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 29, 31. 
சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களையும் தட்டிக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மனதில் இருந்த 
குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும்.    

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின்  நட்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலக வேலைகள் சம்பந்தப்பட்ட பயணங்களில் நன்மைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு  முயற்சிக்குத் தகுந்த வருமானம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.  விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள். வருமானம் சிறிது குறையும்.  சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடும்.  

அரசியல்வாதிகளுக்கு பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு சீராகவே தொடரும்.  ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரின் அன்பும், பாசமும் அதிகரிக்கும்.  சுற்றுலா சென்று மன மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்வீர்கள்.  மாணவமணிகள் பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்துப் படிக்கவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 29, 31. 
சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் தேவையான ஆதரவைக் கொடுப்பார்கள். குழந்தைகள் கல்வியில் சாதனைகளைச் செய்வார்கள். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும்.  
உத்தியோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். 

பணவரவுக்கு குறைவு வராது. சிலரது பெயர், பதவி உயர்வுக்குப் பரிந்துரைக்கப்படும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவார்கள். அதே நேரம் பெரிய கடன் என்று  எதுவும் வாங்க வேண்டாம்.  விவசாயிகளுக்கு  வருமானம் ஓரளவு நன்றாக இருக்கும்.  கால்நடைகளாலும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.  

அரசியல்வாதிகள் புதிய யுக்திகளை கையாண்டு, திறமையுடன் செயல்படுவார்கள்.  எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் அதிகமாக வருமானத்தை ஈட்டுவார்கள்.  சக கலைஞர்களின் பங்கும் இதில் அடங்கும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புனித தலங்களுக்குச் சென்று ஆன்ம ஒளி பெறுவீர்கள்.  

மாணவமணிகள் அதிகாலையில் எழுந்து படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபட்டு வரவும். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 01.  
சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். செய்தொழிலின் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் சிந்தனைகளுக்குப் புதிய செயல் வடிவம் கொடுப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டும் படி நடந்து கொள்வார்கள்.   வியாபாரிகள் நன்றாக உழைத்து அதற்கேற்றப் பலனைப் பெறுவார்கள்.  அனைத்து செயல்களும் சிறு தடைகளுக்குப் பிறகே வெற்றி பெறும். விவசாயிகள் மனம் சோர்வடையாமல் விளைச்சலுக்குப் பாடுபடுவார்கள். நீர்ப் பாசன வசதிகளிலும் கவனம் செலுத்துவார்கள். 

அரசியல்வாதிகள் தங்கள் பணிகளில் நேர்த்தியாகச் செயல்படுவார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்துவீர்கள். கலைத்துறையினர் பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பார்கள்.  உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.  

பெண்மணிகள் குடும்பத்தில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். கணவரிடம் பாசம் அதிகரிக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். 

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 30, 31. 
சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் மறைந்து விடும். உடன் பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில்  நல்ல பெயரெடுப்பார்கள். மேலதிகாரிகள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் பெறுவார்கள்.  புதிய குத்தகைகளும் கிடைக்கும். புழு பூச்சி தொல்லைகளும் இராது.  

அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கட்சியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் சீராகவே இருக்கும். உங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.  

பெண்மணிகளுக்கு கணவரின அன்பும், பாசமும் அதிகரிக்கும். பெரியவர்களை மதித்து நடப்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவார்கள். பெற்றோர்களை அனுசரித்துச் சென்று உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 29, 02. 
சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். பழைய எதிரிகள் அடங்கி விடுவார்கள். உடலாரோக்கியம் மேம்பட யோகா, பிரணாயாமம் செய்யக் கற்றுக்கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலை பளு குறையும். உங்கள் செயல்திறனை அதிகரித்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி விற்பனையைப் பெருக்குவார்கள். வருமானம் அதிகரிக்கும். விவசாயிகள் கடினமாக உழைத்து ஆதாயங்களைப் பெறுவார்கள். நீர்வரத்து தேவைக்கேற்ப இருக்கும். 

அரசியல்வாதிகள் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலையைக் காண்பார்கள். சமுதாயத்தில் தங்கள் பெயர், புகழை உயர்த்திக்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். அதன்மூலம் உங்கள் பெயரும், புகழும் உயரக் காண்பீர்கள். 

பெண்மணிகள் இல்லத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவமணிகள் நன்றாகப் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். 

பரிகாரம்: சூரிய பகவானை வணங்கி வரவும். 
அனுகூலமான தினங்கள்: 30, 02. 
சந்திராஷ்டமம்: 29. 

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பல காரியங்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். கடன் உபாதைகளில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். உடலாரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும்.  

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். பொருளாதார வசதி மேம்பாடு அடையும். வியாபாரிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் சந்தையில் கூடுதல் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். பால் வியாபாரத்தில் நல்ல பலனடைவீர்கள். 

அரசியல்வாதிகள் படிப்படியாக கட்சியில் உயர் பதவியில் அமரத் தொடங்குவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைவரும் உங்களைப் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். குழந்தைகளால் குதூகலம் உண்டாகும். மாணவமணிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி காண்பார்கள்.

பரிகாரம்: அம்மனை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 29, 03. 
சந்திராஷ்டமம்: 30, 31. 

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். பேச்சில் வசீகரம் கூடும். தேவைக்கேற்ப வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளிடம் பாசமாகப் பழகுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் தங்கள் கவலைகளை மறந்து வேலைகளில் கண்ணும் கருத்துமாய் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களும் உங்கள் வேலையில் பங்கு கொள்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் உயர்வு காண்பார்கள். கடன் வாங்கி அகலக்கால் வைக்காமல் வியாபாரத்தை விரிவுபடுத்தவும். விவசாயிகள் கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும், உரங்களுக்கும் கிடைக்கவேண்டிய மானியங்கள் வந்துசேரும்.

அரசியல்வாதிகள் வெற்றி மேல் வெற்றி பெறுவார்கள். பழைய வழக்கு விஷயங்களிலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கலைத்துறையினர் சமுதாயப் பணிகளைச் செய்து தங்கள் பெயரை உயர்த்திக் கொள்வார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலையைக் காண்பார்கள். மாணவமணிகள் இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவார்கள்.  

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 29, 03. 
சந்திராஷ்டமம்: 01, 02. 

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

தயக்கமின்றி உங்கள் முடிவுகளைச் செயல்படுத்துவீர்கள். நண்பர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். உங்களின் நெடுநாளைய ஆசை ஒன்று இந்த வாரம் நிறைவேறும். பெரியோர்களின் ஆசிகளையும் தேடிப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருக்கும் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். வியாபாரிகள் கடினமான சூழலிலும் சுலபமாக வெற்றி பெறுவார்கள். உங்கள் பொருளாதார நிலை உயரும். விவசாயிகளின் மதிப்பு கெüரவம் அதிகரிக்கும். புதிய கிணறு தோண்டுவீர்கள். போட்டிக்குத் தகுந்தவாறு தானிய 
விற்பனையைச் செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவார்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். கணவரிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். மாணவமணிகள் தங்களின் திறமைகளைக் கூராக்கிக் கொள்வார்கள். உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறுதுணையாக நிற்பார்கள். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 01, 02. 
சந்திராஷ்டமம்: 03. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com