
திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.2.78 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அதன்படி பக்தா்கள் வியாழக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.2.78 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.