திருப்பதி புஷ்ப யாகம்: அக்.10 முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப யாகம் நடைபெற உள்ளதால் அதற்கான டிக்கெட்டுகள் அக்.10 முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. 
திருப்பதி புஷ்ப யாகம்: அக்.10 முதல் ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புஷ்ப யாகம் நடைபெற உள்ளதால் அதற்கான டிக்கெட்டுகள் அக்.10 முதல் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. 

திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த செப்.27-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை கோலாகலமாக நடந்து முடிந்தது. பிரம்மோற்சவத்தில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்குப் பிறகு உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அர்ச்சகர்களாலும், பக்தர்களாலும், சேவையில் பங்கு கொண்டவர்களாலும் அறிந்தோ அறியாமலோ ஏதேனும் குற்றம் குறை நிகழ்ந்திருப்பின், அதை சரி செய்ய இந்த புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. 

அந்தவகையில், நவம்பர் 1-ம் தேதி கார்த்திகை திருவோணம் நட்சத்திரத்தில் இந்தாண்டிற்கான புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. 

இதனிடையே, புஷ்ப யாகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அக்.10-ம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ள டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com