இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம்..
1008 சங்காபிஷேகம்
1008 சங்காபிஷேகம்
Published on
Updated on
1 min read

சாத்தூர் அருகே பிரசித்திபெற்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்த சங்காபிஷேகத்தை முன்னிட்டு காலை முதல் மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன. மேலும் 1008 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகளும் நடைபெறுகின்றன.

கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், பரம்பரை அறங்காவலர்கள் குழுத்தலைவர் இராமமூர்த்திபூசாரி உள்ளிட்ட சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com