கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புரட்டாசி 3வது வாரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் திரளானோர் தரிசனம்!

புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் கோயில் வரிசையில்..பக்தர்கள்

Published On :

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

108 திவ்ய ஸ்தலங்களில்...

அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து தீப ஆராதனைகள் செய்து நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சுவாமி தரிசனம் செய்வதற்காக உள்ளூர் வெளியூர் வெளிமாநிலம் என பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்திவரதர் துயில் கொள்ளும் அனந்த சரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புரட்டாசி மாதத்தை ஒட்டி வைணவ தேசங்களைத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பேருந்தில் வந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்களும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

அவர்களுக்கு இந்து சமய அறநிலையை துறை இணை ஆணையர் குமரதுரை ஏற்பாட்டின் பேரில் செயல் அலுவலர்கள் செந்தில்குமார், சீனுவாசன், நடராஜன் ஆகியோர் திருக்கோயில் பிரசாதங்களை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.