வருடாந்திர மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், ஜன.14-இல் நடைபெறவுள்ளது.
பக்தா்களின் சரண கோஷங்கள் முழங்க, தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி இ.டி.பிரசாத் கருவறை கதவைத் திறந்து மாலை நேர பூஜைகளை மேற்கொண்டாா்.
பின்னா், சுவாமி ஐயப்பனின் திருமேனி விபூதியுடன் மாளிகைப்புறம் மாதா கோயிலின் சாவியைப் பெற்றுக் கொண்ட மேல்சாந்தி மனு நம்பூதிரி, விநாயகா் மற்றும் நாகராஜா சந்நிதிகளில் வழிபட்ட பின் அக்கோயிலின் நடையைத் திறந்தாா்.
சந்நிதானத்தில் உள்ள ஆழிக்குண்டம் ஏற்றப்பட்டதும் பதினெட்டாம் படி வழியாக பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜன.14-இல் நடைபெறவுள்ளது. அப்போது, பந்தளம் அரண்மனையில் இருந்து எடுத்துவரப்படும் புனிதமான திருவாபரணங்கள் சுவாமிக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மகர பூஜை காலங்களில் ஜன.19 இரவு 11 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மறுநாள் பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி தரிசித்த பிறகு கோயில் நடை அடைக்கப்படும்.
Summary
Sabarimala temple opened for the annual makaravilakku festival on Tuesday evening.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை புதிய தந்திரி நியமனம்

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!
நிறம் மாறிய சபரிமலை தங்க மேற்கூரை! பக்தர்கள் அதிர்ச்சி!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



