நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவிலில் ஆனி மாத தேரோட்ட திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் அமைந்துள்ளது. உலகில் முதல் நடராஜர் மூர்த்தி கோயில் கொண்டுள்ள செப்பறை திருத்தலமானது தாமிரபரணி தீர்த்தமாகக் கொண்டு பஞ்ச சபைகளில் முக்கியமான தாமிரபரணி சபையாக விளங்குகிறது.
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆனி மாதமும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 23ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு நாளும் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Summary
The azhagiya Koothar Temple procession in Sepparai: A large number of devotees participate!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா

பாளை. ராஜகோபால சுவாமி கோயிலில் தேரோட்டம்
வீடியோக்கள்

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை


