டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

பத்ரிநாத் கோயில் நடை நவம்பர் 25ஆம் தேதி முடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
பத்ரிநாத் கோயில்
Updated On :2 அக்டோபர் 2025, 9:57 am

தினமணி செய்திச் சேவை

டேஹ்ராடூன்: குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 25ம் தேதி மூடப்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்து தேதியை அறிவித்துள்ளனர்.

சார்தாம் என்று அழைக்கப்படும் நான்கு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், கடல் மட்டத்திலிருந்து 10,170 அடி உயரத்திலும் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோயில், ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படுவது வழக்கம்.

குளிர் காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக இந்த கோயில் முழுவதும் பனியால் மூடப்படும் என்பதால், இந்த வழக்கம் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோயில் நடை மூடப்படும் என்றாலும், சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை எந்த தேதியில், எத்தனை மணிக்கு மூடப்பட வேண்டும் என்பதை இன்று விஜயதசமி நாளில் நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர்கள் அமர்ந்து நேரத்தைக் கணித்து வழங்கியருக்கிறார்கள்.

அவர்களின் கூற்றுப்படி, வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி பிற்பகல் 2.56 மணியளவில், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயில் நடை சாத்தப்படும் நிகழ்ச்சி சுமார் 5 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கி, ஒவ்வொரு சன்னிதானத்துக்கும் தனித்தனி பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நடையாக ஒவ்வொரு நாள் சாத்தப்படுவது வழக்கம்.

உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பனிக்காலம் காரணமாக மூடப்பட்டு, சரியாக ஆறு மாதங்களுக்குப் பின்னா் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டு மேள தாளங்களுடன் திறக்கப்படுவது வழக்கம்.

summary

The doors of Badrinath, one of the 'chardham' pilgrimages located in the upper Garhwal Himalayan region, will be closed for the winter season on November 25, temple officials said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.